தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, நவ 14 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 2ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ . 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் இந்த ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீ து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதனையடுத்து முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் அ. ராசா, கனிமொழி எம்.பி, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாகித் பல்வா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது புதுடெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சுப்பிரமணியன்சுவாமி கடந்த 3ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
2 ஜி அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் ஒன்று. அதன் உரிமையாளர் சாகித் பல்வா, கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட அலைக்கற்றை ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு ரூ. 1. 650 கோடி கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டணம் 2001ம் ஆண்டுக்கு உரியதாகும். எனினும் அப்போதைய நிதியமைச்சர் ப . சிதம்பரமும், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராசாவும் இடம் பெற்ற மத்திய அமைச்சரவை குழு முறைகேடாக கட்டணங்களை நிர்ணயித்து அனுமதி வழங்கியது. அதன் பின்னர் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் நிறுவனத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்குகளை அபுதாபியில் உள்ள எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ . 3,500 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த எடிசலாட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகளே உள்ளனர். இதன் காரணமாக நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளான ரா மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது. இது குறித்து நன்கு தெரிந்திருந்தும் ப. சிதம்பரம் மற்றும் ராசா ஆகியோர் எடிசலாட் நிறுவனம், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்க அனுமதி அளித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் எடிசலாட் நிறுவனம் பாகிஸ்தானுடனும், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர் என்று மத்திய நுண்ணறிவு பிரிவு அப்போதைய நிதி அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும் இவ்வளவு தடைகளையும் மீறி ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி அளித்திருந்தார்.
இது குறித்து கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு கோப்பு ஒன்றில் அ. ராசா குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனம் அதனை 3 ஆண்டுகள் வரை வேறு எந்த நிறுவனத்திற்கும் விற்க இயலாது. எனவே சிதம்பரம் நான் இந்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர, ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் மீது அமலாக்கத்துறையின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் முறைகேடானது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன்சுவாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க கோருவது இது 2வது முறை. இதற்கு முன்பு 2006ம் ஆண்டு ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி வழங்கியது தொடர்பாக விசாரித்து வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
போா்க் குற்றம்: ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்
24 May 2022கீவ் : உக்ரைனில் போா்க்குற்றத்துக்காக ரஷ்ய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
-
பெட்ரோல், டீசல் விலைகளை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும்: அண்ணாமலை
24 May 2022சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
கஞ்சா விற்பனை செய்தால்சொத்துக்கள் முடக்கப்படும் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை
24 May 2022சென்னை : சென்னை ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்றார்.
-
தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை உள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
24 May 2022சென்னை : ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
-
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு
24 May 2022சென்னை : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவிக்கவிருக்கிற
-
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
24 May 2022வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
24 May 2022டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
24 May 2022சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடியிடம் இந்தியில் பேசிய ஜப்பானிய சிறுவன்
24 May 2022டோக்கியா : ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
-
ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு
24 May 2022டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
-
மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது : சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 May 2022ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிற
-
கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மெத்தனம் கூடாது : அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
24 May 2022சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
-
போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் மட்டுமே பேச தயார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
24 May 2022டாவோஸ் : போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
-
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
24 May 2022மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
-
6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
24 May 2022சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
-
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய்க்கான பிரத்யேக சிகிச்சை வார்டு தயார்: டீன் தகவல்
24 May 2022மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கென பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்தார்.
-
பினராய் விஜயனுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
24 May 2022சென்னை : பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ
-
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெயிலின் அளவு அதிகரிப்பு : லண்டன் ஆய்வாளர்கள் தகவல்
24 May 2022லண்டன் : கடந்த மார்ச் - ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளார
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
24 May 2022கொழும்பு : இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்
24 May 2022புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
24 May 2022சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை: அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு உத்தரவு : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை
24 May 2022சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூ
-
பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை: இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம் : கர்நாடக கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
24 May 2022பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
-
பிரசாந்த் கிஷோருக்கு பதில் சுனில்: 2024 பார்லி. தேர்தலுக்கு தயாராக காங்கிரஸில் குழுக்கள் அறிவிப்பு : நாடு தழுவிய பேரணி நடத்தவும் திட்டம்
24 May 2022புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளா