எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, நவ 14 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 2ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ . 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் இந்த ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீ து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதனையடுத்து முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் அ. ராசா, கனிமொழி எம்.பி, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாகித் பல்வா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது புதுடெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சுப்பிரமணியன்சுவாமி கடந்த 3ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
2 ஜி அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் ஒன்று. அதன் உரிமையாளர் சாகித் பல்வா, கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட அலைக்கற்றை ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு ரூ. 1. 650 கோடி கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டணம் 2001ம் ஆண்டுக்கு உரியதாகும். எனினும் அப்போதைய நிதியமைச்சர் ப . சிதம்பரமும், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராசாவும் இடம் பெற்ற மத்திய அமைச்சரவை குழு முறைகேடாக கட்டணங்களை நிர்ணயித்து அனுமதி வழங்கியது. அதன் பின்னர் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் நிறுவனத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்குகளை அபுதாபியில் உள்ள எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ . 3,500 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த எடிசலாட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகளே உள்ளனர். இதன் காரணமாக நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளான ரா மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது. இது குறித்து நன்கு தெரிந்திருந்தும் ப. சிதம்பரம் மற்றும் ராசா ஆகியோர் எடிசலாட் நிறுவனம், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்க அனுமதி அளித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் எடிசலாட் நிறுவனம் பாகிஸ்தானுடனும், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர் என்று மத்திய நுண்ணறிவு பிரிவு அப்போதைய நிதி அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும் இவ்வளவு தடைகளையும் மீறி ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி அளித்திருந்தார்.
இது குறித்து கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு கோப்பு ஒன்றில் அ. ராசா குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனம் அதனை 3 ஆண்டுகள் வரை வேறு எந்த நிறுவனத்திற்கும் விற்க இயலாது. எனவே சிதம்பரம் நான் இந்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர, ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் மீது அமலாக்கத்துறையின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் முறைகேடானது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன்சுவாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க கோருவது இது 2வது முறை. இதற்கு முன்பு 2006ம் ஆண்டு ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி வழங்கியது தொடர்பாக விசாரித்து வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.