எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ 14 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 2ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ . 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் இந்த ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீ து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதனையடுத்து முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் அ. ராசா, கனிமொழி எம்.பி, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாகித் பல்வா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது புதுடெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சுப்பிரமணியன்சுவாமி கடந்த 3ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
2 ஜி அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் ஒன்று. அதன் உரிமையாளர் சாகித் பல்வா, கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட அலைக்கற்றை ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு ரூ. 1. 650 கோடி கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டணம் 2001ம் ஆண்டுக்கு உரியதாகும். எனினும் அப்போதைய நிதியமைச்சர் ப . சிதம்பரமும், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராசாவும் இடம் பெற்ற மத்திய அமைச்சரவை குழு முறைகேடாக கட்டணங்களை நிர்ணயித்து அனுமதி வழங்கியது. அதன் பின்னர் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் நிறுவனத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்குகளை அபுதாபியில் உள்ள எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ . 3,500 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த எடிசலாட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகளே உள்ளனர். இதன் காரணமாக நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளான ரா மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது. இது குறித்து நன்கு தெரிந்திருந்தும் ப. சிதம்பரம் மற்றும் ராசா ஆகியோர் எடிசலாட் நிறுவனம், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்க அனுமதி அளித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் எடிசலாட் நிறுவனம் பாகிஸ்தானுடனும், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர் என்று மத்திய நுண்ணறிவு பிரிவு அப்போதைய நிதி அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும் இவ்வளவு தடைகளையும் மீறி ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி அளித்திருந்தார்.
இது குறித்து கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு கோப்பு ஒன்றில் அ. ராசா குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனம் அதனை 3 ஆண்டுகள் வரை வேறு எந்த நிறுவனத்திற்கும் விற்க இயலாது. எனவே சிதம்பரம் நான் இந்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர, ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் மீது அமலாக்கத்துறையின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் முறைகேடானது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன்சுவாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க கோருவது இது 2வது முறை. இதற்கு முன்பு 2006ம் ஆண்டு ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி வழங்கியது தொடர்பாக விசாரித்து வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கான ஒரு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி
18 Dec 2025மஸ்கட், இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூ
-
ஜனவரி 24-ம் தேதி தி.மு.க.வின் 2-வது இளைஞரணி மாநாடு
18 Dec 2025சென்னை, முதற்கட்டமாக தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2025.
19 Dec 2025 -
ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகளை ஜனவரி 5 - க்குள் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் கெடு
19 Dec 2025சென்னை, ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
19 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள
-
கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
19 Dec 2025சென்னை, கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆலோசனை நடத்தினார்.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங
-
எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி?
19 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு
19 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
-
காந்தி பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 2-வது நாளாக போராட்டம்
19 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங
-
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்
19 Dec 2025சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
19 Dec 2025பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து த
-
துணை ராணுவம் திடீர் தாக்குதல்: சூடானில் 16 பேர் பலி
19 Dec 2025கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் உள்ள தெற்கு கார்டூமின் மாகாணம் டில்லிங் பகுதியில் துணை ராணுவப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
-
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 152 விமானங்கள் ரத்து
19 Dec 2025புதுடெல்லி, பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
19 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி தங்கம் 1 கிராம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது.
-
அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
19 Dec 2025பிரசல்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் அடித்த கொலை
19 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து மத இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டு அவரது உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி த.வெ.க.வின் பொதுக்கூட்டம்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
19 Dec 2025சேலம், ஈரோட்டில் த.வெ.க.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Dec 2025சென்னை, செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
என்னை வளர்த்தெடுத்த ஆசான்: பேராசிரியர் அன்பழகனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
19 Dec 2025சென்னை, என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொடர் வெற்றிகளை பே
-
செவிலியர் பணிக்கு காலி இடங்கள் தற்போது இல்லை: அமைச்சர் தகவல்
19 Dec 2025சென்னை, செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!
19 Dec 2025பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகி
-
வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா
19 Dec 2025புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



