முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேறு மொழி.

ஒருவர் பேசும் போது குரலின் ஒலியை வைத்து பேசுபவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை கூறிவிட முடியும். ஆனால் ஒருவர் பேசிய மொழியை வைத்து இதை பேசியவர் ஆணா, பெண்ணா எனக் கூற முடியுமா.. ஆனால் அப்படி ஒரு விநோதமான இடம் நைஜிரீயாவில்  உள்ளது. இங்குள்ள சிறுவர்களும் சிறுமிகளும் ஒரே இடத்தில் வளர்ந்தாலும் இரு வேறு பாஷையையே பேசுகின்றனர். நைஜிரீயாவில் உள்ள உபாங் என்ற கிராமம் தான் அந்த அதிசய மொழி பேசும் கிராமம். எனவே சொற்களை கொண்டே இதை பேசியது ஆணா, பெண்ணா என்பதை சொல்லிவிடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உதாரணமாக தண்ணீரை ஆண்கள் பாமுயி என்றால் பெண்கள் அமு என்கின்றனர். இந்த மரபு எப்போதிலிருந்து தொடங்கியது என யாருக்கும் தெரியவில்லை. எனவே ஆண்களின் முன்னால் பெண்கள் தைரியமாக ரகசியங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்... மாறி வரும் காலச்சூழலில் ஆங்கில கலப்பால் உபாங் மொழி அழியும் நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்..

அதிசய தம்பதிகள்

கொலம்பியா, மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ இருவரும் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், சேர்ந்து வாழ முடிவெடுத்து,  பயனில்லாத பாதாளச் சாக்கடையில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்கி குடியேறினர். பாதாளச் சாக்கடையில் 22 வருடங்களாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். இந்த இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருவதுதான் ஆச்சரியம்.

வினோத மக்கள்

இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர்.

இரண்டு அணுகுண்டு வீச்சில் தப்பியவர்

உலக வரலாற்றில் 1945 ஆகஸ்ட் 9 ஐ மக்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதே போல மறுநாள் ஆகஸ்ட் 10. ஏன்? கொடிய அமெரிக்கா உலகையே உலுக்கும் வகையில்  ஜப்பான் மீது அணுகுண்டு வீசி தாக்கிய நாள். அணுகுண்டை இனி பயன்படுத்தினால் உலகம் என்னவாகும் என்பதற்கு துயர சாட்சியாக நின்ற நாள். சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்தனர். தலைமுறை தலைமுறையாக அதன் கதிர்வீச்சு பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் ஒரு அதிசயம் நடந்தது. அணுகுண்டு வெடித்த போது சற்று தொலைவில் இருந்த ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் தனது 93 வயது வரை வாழ்ந்து அந்த துயர சம்பவத்தின் உயிர் சாட்சியாக  விளங்கினார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி. அணுகுண்டு வெடித்த போது அவருக்கு வயது 29. கடந்த 2009 இல் தனது 93 வயதில் சிறுநீரக மற்றும் வயிற்று புற்றுநோயால் மறைந்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள்.

இங்கிலாந்துக்கு ஆங்கிலம் எப்போது வந்தது தெரியுமா?

ஆங்கிலத்தின் தாயகம் இங்கிலாந்து என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுமார் 300 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆட்சி செய்தது பிரெஞ்சு மொழிதான். 1066 க்கும் 1362 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் ஆட்சி மொழியாக பிரெஞ்சுதான் இருந்தது. 1066 இல் வில்லியம் தலைமையிலான நார்மன் ஆட்சி வந்த போது, ஆங்கிலோ- நார்மன் பிரெஞ்சு மொழியை அறிமுகப்படுத்தினார். இந்த மொழியை பிரபுக்கள், அரசு உயர் அதிகாரிகள், செல்வந்தர்கள் ஆகியோர் பேசி வந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு ஆங்கிலம் பேசக் கூட தெரியாது. பின்னர் 1362 இல் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம் இயற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நார்மன் பிரெஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சாமானிய மக்களுக்கு நீதி மன்றத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.

மனமும் மருந்தும்

இன்றைய சூழலலில், ஸ்ட்ரெஸில் இருந்து விடுபட மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர், பாலியல் பக்க விளைவுகளை சந்திக்கக்கூடம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago