Idhayam Matrimony

கடலூர்: ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் : நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      தமிழகம்
CM 2024-12-03 (2)

Source: provided

சென்னை : கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் வட்டம், ஸ்ரீ வக்காரமாரி கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த செல்வன். அப்துல் ஆசிம் (வயது 12) என்ற சிறுவன் இன்று (26.07.2025) காலை சுமார் 10.30 மணியளவில் ஸ்ரீ வக்காரமாரி குன்னத்தேரி என்ற ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து