கூகுள், கடந்த 8 வருடங்களாக முயற்சி செய்து அக்டோபர் மாதம் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் எக்ஸ் லேப் என பெயரிடப்பட்ட கூகுளின் இந்த தானியங்கி கார்கள் தற்போது வேமோ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கார் மூலம் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் போன்றவற்றால் உருவாகும் விபத்துகளை தவிர்க்க முடியும்.கண் தெரியாதவர்கள் கூட தனியாக வேமோவில் எளிதாக பயணிக்கமுடியும் என்கிறது கூகுள். ஜிபிஎஸ் செட்டிங்க்ஸ் மூலம் இந்த வகை கார்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சூழல், சிக்னல் போன்றவற்றை உணர்ந்து செயல்படுகின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர் அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.
சீனா, தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.இதன்மூலம், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய பல தேசங்களை கடந்து லண்டன் மாநகரை அந்த ரயில் அடையும். யுவூ மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட 12,000 கிமீ தூரத்தை 18 நாட்களில் கடக்க இருக்கிறது இந்த சரக்கு ரயில்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனை வைத்திருந்தாலே ஒரு தனி கெத்து என நவீன யுகத்து யூத்கள் கருதி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க விரும்பிய முதல் போன் எது தெரியுமா... ஐபோனை தயாரிப்பதற்கு முன்பாக மடக்கி விரிக்கும் போனைத்தான் அது தயாரிக்க விரும்பியது. அதை மடக்கி மூடினால் ஆப்பிளை போல காட்சியளிக்கும். அது போன்ற ஒரு வடிவமைப்புக்கே அது பேடன்ட் உரிமையும் வாங்கி வைத்திருந்தது. இவ்வாறே அது ஆப்பிள் போன் என பெயர் பெற்றது. பின்னாளில்தான் அது ஐபோனை தயாரிக்க தொடங்கியது.
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பண்டைய கட்டிட கலைக்கு சாட்சியமாக விளங்குபவை கோயில்கள். அதிலும் இன்று வரையிலும் பல்வேறு விற்பன்னர்களாலும் அவிழ்க்க முடியாத கட்டிட கலை நுட்பங்களை அவை தங்களுக்குள் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இக்கோயிலில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா.. எப்படி தஞ்சை பெரிய கோயிலில் கோபுரத்தின் நிழல் கீழே விழாதோ... அதே போலு இந்த கோபுரத்தின் நிழல் கிழே விழும்போது தலைகீழாக தெரியும். அதாவது ஒரு லென்ஸ் வழியாக கோபுரத்தை படம் பிடித்தால் எப்படி தலைகீழாக காட்சி அளிக்குமோ அது போல அதன் நிழல் அங்குள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கோபுரத்தின் தலை கீழாக விழுவதை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். எந்த ஒரு இடை ஊடகமும் இல்லாமல் நிழல் தலைகீழாக மாற என்ன காரணம்? இதுவரை யாருக்கு புரியாத புதிராக உள்ளது இந்த மர்மம்.
அப்போது 1960களின் தொடக்கம். விக்ரம் சாராபாய் இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடம். தற்போது அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கே இருந்த சர்ச் ஒன்றில்தான் அதன் அலுவலகம் செயல்பட்டது. அவ்வளவு ஏன் நாசா மற்றும் நைக் அப்பாச்சியின் உதிரிபாகங்கள் அங்குதான் ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டன. இந்த பாகங்கள் மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்டன என்றால், முதன் முதலாக தயார் செய்யப்பட்ட ராக்கெட் சைக்கிளில்தான் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..இன்றைக்கு உலக நாடுகளுக்கு இணையாக சந்திராயன் விண்ணில் பாயும் வேளையில் இந்தியாவின் முதல் காலடி இவ்வாறுதான் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்


