முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

திப்பு சுல்தான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி

இன்றைக்கு செயற்கை கோள்களை சுமந்த படி விண்ணில் பறக்கும் ராக்கெட்டுகளை நாம் தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். அதே போல ராணுவத்தினரின் போர் பயிற்சியின் போதும் ராக்கெட் வடிவிலான ஏவுகணைகளை கண்டிருப்போம். ராக்கெட், ஏவுகணை இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியவைதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 18 ஆம் நூற்றாண்டுவரை அனைத்து நாடுகளிலும் ராக்கெட்டுகள் மரம் அல்லது மூங்கிலை கொண்டே தயாரிக்கப்பட்டன. உலகிலேயே முதன் முதலாக உலோகத்தினாலான ராக்கெட்டை செய்தவன் திப்பு சுல்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். குண்டூர் யுத்தத்தின் போது ஆங்கில படைகளை உலோக ராக்கெட்டுகளை பயன்படுத்தி தெறிக்க விட்டான். அவன் உருவாக்கிய ராக்கெட்டுகள் 20 செமீ நீளம் 8 செமீ விட்டமும் கொண்டவையாக சுமார் 3 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக விளங்கின. அன்றைய கால கட்டத்தில் மிக தொலை தூரம் சென்று தாக்கும் ராக்கெட் திப்புவினுடையது மட்டும்தான் என்பது ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே..

சிந்திய காபியில் சித்திரம் தீட்டி அசத்தும் இத்தாலிய இளைஞர்

எதையும் கலைக் கண்ணோடு அணுகி அதையும் தனது தனித்தன்மையாக மாற்றிக் கொள்ளக் கூடிய வல்லவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் இத்தாலியில் உள்ள Mantua என்ற இடத்தைச் சேர்ந்தவரான Giulia Bernardelli என்ற 34 வயது இளைஞர். ஓவிய நுண்கலைப் பிரிவில் பட்டதாரியான இவருக்கு, அழகிய சித்திரங்களை தீட்ட மற்றவர்களை போல வண்ண வண்ண நீர் வண்ணங்களோ, பெயிண்டோ, பேஸ்டலோ, பிரஷ்ஷோ தேவையில்லை, ஜஸ்ட் தரையில் சிந்திய காபியும் ஸ்பூனும் இருந்தால் போதும்.. அசத்தலான ஓவியங்களை தீட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறார். இவரது காபி ஓவியங்களை ஆர்வலர்கள் உலகம் முழுதும் கொண்டாடி பரப்பி வருகின்றனர். கண்ணை கவரும் வகையில் இவர் வரைந்துள்ள ரயில் நிலையம், யானை, மிகப் பெரிய கோட்டை, அழகிய மனித முகங்கள் ஆகியன காண்பவரை கவர்ந்திழுக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. ஓவியம் வரைவது ஓரு கலை என்றால் சிந்திய காபியில் சிதறாமல் அதை சித்திரமாக்குவது புதுக்கலை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை... குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலும் அவை நீராகவே இருக்கின்றன. அவர்களது உடலில் 75 சதவீதம் நீரே இருப்பதாக நாசாவின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதன் வளர வளர தனது நீர்ச்சத்தை இழப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்த மனிதர்கள் 55 முதல் 60 சசதவீதம் வரையில் நீரை இழக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன அற்புதம் பாருங்கள் உடல் நீராலானது என்றால் ஆச்சரியம் தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago