முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சந்திரனில் மனிதனின் காலடி தடங்கள்

நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் 969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். இந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் பதித்தார். அங்கு பதிந்த காலடி தடங்கள் அப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.. ஏன் தெரியுமா.. சந்திரனின் மேல் புறத்தில் காற்று, நீர் போன்ற சூழல் கிடையாது. எனவே காலடி தடத்தை காற்றோ, நீரோ அழிக்க வாய்ப்பு இல்லை. எனவே கோள்களில் மாற்றம் ஏற்படும் வரை அதாவது சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் வரை அது அப்படியே இருக்கும் என்றால் ஆச்சரியம் தானே...

3டி பிரிண்டிங் முறையில் கட்டப்பட்ட பள்ளிக் கூடம்

3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் இன்றைக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை உறுப்புகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்து வரும் இந்த தொழில் நுட்பம் தற்போது கட்டுமானத்துறைக்குள்ளும் தனது காலடியை பதித்துள்ளது. முதன் முறையாக 3டி முறையில் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி சாதனை படைத்துள்ளனர். இனி மேல் எந்த இடத்திலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியை கட்டி விடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உலகிலேயே முதன்முறையாக 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட பள்ளி கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது. ஆப்ரிக்காவில் உள்ள மாலாவியில் இந்த பள்ளி 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கட்டிடப் பொருள்களை தயாரிப்பதில் பிரபலமான பிரிட்டனில் உள்ள நிறுவனமும், சுவிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இதன் மூலம் உடனடியாகவும், தேவையான இடங்களிலும் இது போன்ற கட்டிடங்களை எதிர்காலத்தில் தயாரிக்க முடியும் என அவை தெரிவித்துள்ளன.

இந்தியர்களின் உடலில் சர்க்கரை நோயை அதிகரிக்க செய்யும் மரபணு

15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago