முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விஞ்ஞானியாக இருந்த போதும் ரசவாதத்தை நம்பியவர் யார் தெரியுமா?

மனித அறிவியல் வரலாற்றில் ரசவாதம் என்பது ஒரு மிகப் பெரிய காலகட்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இன்றைக்கு நவீன அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் தனிமங்கள் குறித்த அறிவு பொதுவாகவே பரவலாக்கப்பட்டு விட்டது. ஆனால் கடந்த காலத்தில் சில விஞ்ஞானிகள் கூட ரசவாதத்தை நம்பினர் என்றால் ஆச்சரியம் தானே...ரச வாதம் என்பது எந்த தனிமத்தையும் தங்கமாக மாற்றுவது என்பதுதான் அது. அப்படி நம்பிய விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சர் ஐசக் நியூட்டன் என்றால் நம்ப முடிகிறதா..சர் ஐசக் நியூட்டன் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் இயற்பியலில் பெரும் பங்களிப்பைச் செய்தார். ஆனால் இது ரசவாதத்தை நம்புவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை, இது இப்போது புராணங்களின் அடிப்படையில் ஒரு போலி அறிவியலாக கருதப்படுகிறது. தனது நாட்களின் இறுதி வரை, நியூட்டன் ஒரு நாள் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினார்.

தீக்குச்சிகள் எப்போது பயன்பாட்டுக்கு வந்தன

பழங்கால மனிதன் தீயைக் கண்டுபிடித்தபோதே முதல் தீக்குச்சி வடிவமைக்கப்பட்டதாகக் கருதலாம். தற்காலத் தீக்குச்சிகள், குறைவான வெப்ப நிலையிலேயே தீப்பிடித்துக்கொள்ளும் பாஸ்ஃபரஸ் (phosphorus) கண்டறியப்பட்ட பின்னர் உருவானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்திப் பல்வகை வடிவிலான தீக்குச்சிகள் வடிவமைக்கப்பட்டன.முதலாவது பாதுகாப்பான தீக்குச்சிப் பெட்டிகள் (safety matches) 1844ஆம் ஆண்டு ஸ்வீடனில், நச்சுத் தன்மையற்ற சிகப்புப் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டன. தீப்பிடித்து எரிவதற்குத் தேவையான எல்லா வேதிப்பொருட்களையும் தீக்குச்சியின் தலைப் பகுதியில் சேர்க்காமல், சிகப்புப் பாஸ்ஃபரஸை பக்கவாட்டுச் சுவர்ப் பகுதியில் பூசி, தீக்குச்சியை அதில் உராயச் செய்து தீயை உண்டாக்கும் வகையில் தீப்பெட்டி செய்யப்பட்டது.

யானையா? மனிதனா? வலுக்கும் மோதல்

மாறி வரும் சூழல் காரணமாக பல் உயிர் பெருக்க சுழற்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு புவி வெப்பமயதால், கார்பன் எமிசன் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் இயற்கையின் அழிவுக்கு மனிதனின் பேராசை மட்டுமே காரணமாக இருக்க முடியும். இதனால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய பல்லுயிர் பெருக்க வன வாழ்விடமான மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள் மிகுந்த அபாயத்தை எதிர் கொண்டுள்ளன. இதற்கு முக்கிய உதாரணமாக யானைகளுக்கும் மனிதனுக்கு ஏற்பட்டுள்ள முரண்களை சூழலியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். கடந்த 2019 வரை முந்தைய 5 ஆண்டுகளில் மட்டும் 2300க்கும் அதிகமான மக்கள் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் கூறுகின்றன. அதிலும் அதே கால கட்டத்தில் 500க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளன. அதில் குறிப்பாக 333 யானைகள் மின்சாரம் தாக்கியும், சுமார் 100 யானைகள் வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன என்பது இதன் அவலத்தை நமக்கு தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றன.

ஒருநாள் போதும்

வீடுகட்ட ஒரேயொரு நாள் போதும் என ரஷ்யாவின் அபிஸ் கோர் நிறுவனம் நிரூபித்துள்ளது. கணினியில் இருக்கும் வரைபடத்தின் படி வீட்டின் சுவர்கள் கண் முன்னே உருவம் பெறுகின்றன. 4 அறைகள் கொண்ட வீட்டினை கட்ட சுமார் 6.77 லட்சம் ரூபாய்தான் செலவாம். இந்த வீடுகள் அனைத்து தட்பவெப்ப நிலையில் தாங்கும். மேலும் 175 ஆண்டுகள் வரை இருக்குமாம்.

வீட்டு வைத்தியம்

கடுக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு போன்றவை பல் வலி, ஈறுவீக்கம் பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. கடுக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. துவர்ப்பு சுவை நிறைந்த இது பற்களில் ஏற்படும் பிரச்னையை குணப்படுத்துகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. சுக்கு பற்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. மாசிக்காய் பொடி மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. பல் வலியை சரிசெய்ய கூடியது. பூண்டு, இந்துப்பு ஆகியவையும் பல் நோய்களுக்கு மருந்தாகிறது.

வீடு கட்டும் விலங்கினம் எது தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

குஞ்சு பொரிப்பதற்கு முன்னால் பறவைகள் கூடுகட்டுகின்றன. அதே போல குட்டி போடுவதற்கு முன்பாக விலங்குகள் ஏதேனும் கூடு அல்லது வீடு கட்டுகின்றனவா.. என்று கேட்டால், ஆம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாலூட்டிகளில் ஒரு விலங்கினம் அவ்வாறு வீடு கட்டுகிறது. குச்சிகள், இலைகள், வைக்கோல்கள், பசுந்தழைகள் ஆகியவற்றை கொண்டு வந்து பஞ்சு பொதி போன்ற வீட்டையும், குட்டிகளுக்கு மெத்தென்ற படுக்கையையும் அந்த விலங்கு தயார் செய்கிறது. அது சினையாக இருக்கும் 3 மாத, 3 வார, 3 நாள் கால கட்டத்தில் அது இவ்வாறான கூடு கட்டும் பணிகளில் ஈடுபடுகிறது. நாம் அந்த விலங்கை தினமும் பார்த்து வந்தாலும் நம் அனைவருக்கும் தெரியாத ரகசியமாக இந்த நடவடிக்கை இருப்பதை அறிந்தால் அது ஆச்சரியம் தானே. அந்த விலங்கு வேறு எதுவும் இல்லை. நாம் அன்றாடம் பார்க்கும் சேற்றில் திளைக்கும் பன்றிதான் அது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago