இந்தோனேசியாவில் 350 கி.மீ. பரப்பளவு கொண்ட தீவுதான் கொமோடோ தீவு. இத்தீவில் உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ டிராகன் என்ற ராட்சத உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த டிராகன் விலங்குகள் கொமோடோ தீவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் இந்த டிராகனுக்கு கொமோடோ டிராகன் எனப் பெயரிடப்பட்டது. சமீபகாலமாக கொமோடோ தீவிற்கு அருகிலுள்ள ரின்கா தீவிலும் இந்த உயிரினம் அதிகமான எண்ணிக்கையில் வளர ஆரம்பித்துள்ளன. இந்த உயிரினங்கள் 10 அடி நீளம் வரை வளரக்கூடியது. சிறுவர்களை அதிவேகமாக வேட்டையாடி உண்ணும் திறன் படைத்தது. அதனால் இந்த இரு தீவுகளிலும் மக்கள் வசிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசி நிரூபித்துள்ளனர். ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை. வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.
செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.
ஒரு காலத்தில் தரையில் சீறிப் பாயும் கார்கள் வானில் பறக்கும் என்று கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அந்த கற்பனை உண்மையாகி வருகிறது. வெகு விரைவில் உலகம் முழுவதும் பறக்கும் கார்கள் வானில் வலம் வரப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு அச்சாரமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வித்தியாசமான கார் பந்தயம் இதை நிரூபித்துள்ளது. அதிலும் இதில் பங்கேற்ற அனைத்து கார்களும் வானில் பறக்கக் கூடியவை. அது மட்டுமின்றி இவை அனைத்தும் பெட்ரோல் போன்ற எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. சுத்தமாக சொன்னால் பறக்கும் எலெக்ட்ரிக் கார்கள். அக்டோபரின் இறுதியில் நடைபெற்ற இந்த போட்டிகள் குறித்த ஆச்சரிய வீடியோ தற்போது வெளியாகி நெட்டை கலக்கி வருகிறது. இந்த போட்டியினை தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலடா ஏரோநாட்டிக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் வடிவமைத்து, தற்போது நடத்தி முடித்துள்ளது. இப் போட்டிக்கு ‘ஏர்ஸ்பீடர்'-இன் முதல் பகுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாலைவன பகுதியில், வெறும் 300மீ தொலைவிற்கு மட்டுமே இந்த போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள எக்ஸா (EXA) எனப்படும் சர்வதேச போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒத்திகை போன்றதாகும். இவ்வாறான பந்தயங்கள் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பிற்கு ஊக்கமளிக்கும்.
மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம். இங்கு கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைந்தன. அதற்கான காரணம் பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தானாம். கில்லர் க்ளவுட்ஸ் என்று அழைக்கப்படும், பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் இந்த மேகங்கள் அறுங்கோண வடிவில் (Hexagonal) இருப்பதால், அங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இதனாலேயே, பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை
25 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக நேற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்
25 Nov 2025கோவை : கோவை செம்மொழி பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
25 Nov 2025திருப்பூர் : சுகாதார சீர்கேடு-வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேட்டை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
வரும் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்
25 Nov 2025சென்னை, வரும் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
25 Nov 2025மும்பை, ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? - மேலிட பொறுப்பாளர் அசோக் விளக்கம்
25 Nov 2025சென்னை : த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா என்பது குறித்து மேலிட பொறுப்பாளர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார்.
-
சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் : தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
25 Nov 2025புதுடெல்லி : சிம்கார்டை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்றும் தொலைதொடர
-
வரும் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
25 Nov 2025சென்னை, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை எச்சரிக்கையை அடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எ
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் பிரம்மாண்ட பேரணி
25 Nov 2025பீகார், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
-
அயோத்தியில் பிரதமர் மோடி ரோடு ஷோ
25 Nov 2025அயோத்தி, அயோத்திக்கு வருகைதந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் மத்தியில் காரில் சாலைவலம் வந்தார்.
-
பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
25 Nov 2025சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
-
இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய புயல் சின்னம் உருவானது
25 Nov 2025சென்னை, குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப
-
உலகக் கோப்பை 2025-ஐ வென்ற மகளிர் கபடி அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
25 Nov 2025சென்னை, தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்ற மகளிர் கபடி அணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
-
தி.மலையில் கார்த்திகை தீபத்திருவிழா: பாதுகாப்புப்பணியில் 15 ஆயிரம் போலீசார்
25 Nov 2025திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
-
நாளை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
25 Nov 2025சென்னை : சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங் களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி: பிரதமர் மோடி
25 Nov 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டப்பேரவை டிச.1-ம் தேதி கூடுகிறது
25 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை வருகிற 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
25 Nov 2025சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Nov 2025சென்னை : கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
-
Zee தமிழின் புதிய தொடர் அண்ணாமலை குடும்பம்
25 Nov 2025230 அடி சேலை மூலம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் Zee தமிழின் புதிய தொடராக வருகிறது "அண்ணாமலை குடும்பம்".
-
குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நவ. 29-ல் சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : வருகிற நவ. 29 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் "ஃப்ரைடே திரைப்படம்
25 Nov 2025டக்டம் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "ஃப்ரைடே"
-
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது மிக கண்டனத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட் கருத்து
25 Nov 2025புதுடெல்லி, தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
-
இரவின் விழிகள் திரைவிமர்சனம்
25 Nov 2025சமூக வலைதளங்களில் எல்லை மீறிய செயல்களை செய்பவர்களை பட்டியலிட்டு ஒவ்வொருவராக ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார்? எதற்காக இப்படி செய்கிறார்?


