முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வினோத போட்டி

அமெரிக்காவில் பிரபலமான கிஸ் எப்.எம். வானொலி நிலையம் ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், நடத்தப்பட்ட காரை முத்தமிடும் போட்டியில் 20 பேர் பங்கேற்றனர். போட்டி தொடங்கி 50 மணி நேரம் கடந்த நிலையில், 7 பேர் தொடர்ந்து கார் மீது முத்தமிட்டவண்ணம் இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்து ஜெயசூர்யா என்ற பெண்ணுக்கு புதிய கியா ஆப்டிமா கார் பரிசாக வழங்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா

குத்துச்சண்டை வீரராக அறியப் பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர். இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாம். மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.

வெந்நீர் பயன்

வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. மேலும், உடலை சுத்தம் செய்து, வேகமாக வயதாவதை தடுக்கிறது. வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறையும். நஞ்சை வெளியேற்றும். வெந்நீரில் சுக்கு கலந்து குடித்தால் வாயுத் தொல்லை இருக்காது. எடை குறையும்.

மழை காலமும் உணவும்

மழைக்காலத்தில் விட்டமின் சி நிறைந்த பேரிக்காய், மாதுளை, மிளகு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். கிருமிகளை அழித்துவிடும். பூண்டு உடலுக்கு சூட்டை தரும். இஞ்சி வயிற்றுப் போக்கு, அஜீரணம் ஆகிய்வற்றை தடுக்கும். அதிக நார்சத்து கொண்ட ஆப்பிள் மலச்சிக்கலை தடுக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

நினைவாற்றல் அதிகம்

யானைகள் எதையும் மறக்காது. ஆனால், பெரும்பாலும் தூங்குவதே இல்லை. நல்ல நினைவாற்றலுக்கு தூக்கம் மிக அவசியம். ஆனால் போட்ஸ்வானா வகை யானைகளை ஆராய்ந்ததில், அவை சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரமே தூங்குவதாகவும் சிலநாட்கள் அவை தூங்குவதே இல்லை, எனினும் அவற்றின் நினைவாற்றல் அதிகமாக உள்ளது.

சொடக்கு எடுக்கும்போது விரல்களிலிருந்து சத்தம் ஏன் வருகிறது தெரியுமா?

கை, கால் விரல்களிலிருந்து சொடக்கு எடுக்கும்போது சத்தம் ஏன் கேட்கிறது என்று தெரியுமா? நாம் கை கால்கள் களைப்பாக இருக்கும்போது விரல்களை வளைத்து, இழுத்து சொடக்கு எடுப்பது வழக்கம். கை விரல்களை போலவே, கால் விரல்களிலும் நாம் அவ்வாறு செய்வதுண்டு. சிலருக்கு அவ்வாறு சொடக்கு எடுத்து முடித்ததும் ஒரு ஆசுவாசம் வந்ததுபோல உணர்வார்கள். ஆனால், இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என தெரியுமா.. நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல விரல்களில் உள்ள எலும்புகளிலோ, அல்லது தசை நார் இறுக்கம் தளர்வதாலோ வருவதில்லை. மாறாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் நைட்ரஜன் வாயு குமிழ்கள் (Nitrogen Gas Bubbles) நாம் அழுத்தும்போது வெடிப்பதனால் சொடக்கு எடுப்பது போல சத்தம் நமக்கு கேட்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago