முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

புதிய வசதி

ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்பில், சேவ் யுவர் பார்க்கிங் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை பதிவு செய்து கொள்ளலாம். கார் நிறுத்தம் குறித்த கூடுதல் தகவல்களையும் இதில் சேர்க்கலாம் என கூகுள் நிறுவனம், தெரிவித்துள்ளது. கார் நிறுத்த தகவல்களையும் இடத்தையும் புகைப்படமாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

அறிவுறுத்தும் ஆவல்

புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருந்தால், பித்தப்பை மற்றும் கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இறைச்சிகளின் மீது நாட்டம் இருந்தால், உடலுக்கு புரோட்டீனை தேவை என்று அர்த்தம். சர்க்கரை  மீது ஆவல் அளவுக்கு அதிகமாக நாம் சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்று அர்த்தம்.

மனிதர்களோடு ஏலியன்கள் பேசினரா? நீடிக்கும் ரேடியோ சிக்னல் புதிர்கள்

வேற்று கிரகங்களில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வந்தால் அவற்றை ரீசீவ் செய்வதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் ஓஹேயோ பல்கலை கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடியோ அப்சர்வேட்டரி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப் என்ற அமைப்பாகும். பிரபஞ்சத்துக்கு வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை உள்வாங்கி அதை ஆய்வு செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் சுவாரசியமான விஷயம் ஏலியன்களை குறிவைத்தே இந்த ஆய்வகம் செயல்பட்டது. அது போன்ற தகவல் ஒன்றையும் இந்த ரேடியோ டெலஸ்கோப் ரீசீவ் செய்தது என்பதுதான் ஆச்சரியம்.பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது என்றும், அதன் ரேடியோ அதிர்வெண் 1420 மெகா ஹெர்ட்ஸ் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் 1977 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு அதிசயம் நடந்தது. ஜெர்ரி இகாமென் என்ற ஆய்வாளர் பணியில் இருந்த போது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து வந்த வித்தியாசமான ரேடியோ அலை ஒன்றை பதிவு செய்துள்ளார். அது வெறும் 72 விநாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. அதை டீகோட் செய்த போதுதான் உலகுக்கே மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது ஆங்கிலத்தில் 'வாவ்' என அது குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் பூமியை, மனிதனை பார்த்து வாவ் என்று கூறியது யார் என்ற மர்மம் இன்னும் விலகாத புதிராகவே நீடித்து வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. ஏலியன்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளில் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் என்ற கின்னஸ் சாதனையையும் 1995 இல் இது படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 98 இல் இந்த அப்சர்வேட்டரி கலைக்கப்பட்டு விட்டது.

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

விவசாயம் செய்யும் எறும்புகள்

உலகில் மனிதனுக்கு பிறகு தனக்கு தேவையான உணவை தானே விவசாயம் செய்யும் உயிரினம் எது தெரியுமா..அது எறும்புதான்..இந்த எறும்புகள் இலைகளை சின்ன சின்னதாக கத்தரித்து எடுத்து வந்து தனது கூட்டுக்குள் வைத்துவிடும். சில நாட்கள் கழித்து அந்த இலைகளில் ஒருவைகையான பூஞ்சைகள் வளரும். அவற்றை எறும்புகள் உணவாக உண்ணும். இது தான் எறும்புகள் செய்யும் விவசாயம். அந்த இலைகள் காய்ந்த பின் அவற்றை வேலைக்கார எறும்புகள் வெளியே எடுத்து போட்டுவிடும். பிறகு புதிதாக இலைகளை வெட்டி வந்து வைக்கும். அதில் வளரும் பூஞ்சைகளை தான் உண்ணும். இப்படி தனக்கு தேவையான உணவை. தானே விவசாயம் செய்து உண்ணும் உயிரினம் தான் எறும்புகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago