அறிவியல் எப்போதும் சிக்கலான கால வரிசையை கொண்டிருக்கும். எது எப்போது வெளிப்படும் என்பதை மனிதனால் யூகிக்க முடியாது. அதே போல தான் மிகவும் எளிமையான தீக்குச்சி தீப்பெட்டி போன்றவை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அதான்ங்க... சிகரெட்களை பற்ற வைக்க நாம் பயன்படுத்துகிறோமே அந்த குட்டி சாதனம்தான்... 1816 இல் ஜெர்மனி வேதியியலாளர் ஜோகன் வுல்ப்காங் என்பவர் லைட்டரை கண்டு பிடித்து விட்டார். அதற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து 1827 இல் தான் தீப்பெட்டியும் தீக்குச்சியையும் பிரிட்டனை சேர்ந்த வேதியியலாளர் ஜான் வாக்கர் என்பவர் சல்பைடு, பொட்டாசியம் குளோரேட், பசை, ஸ்டார்ச் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கிறார். தொடக்கத்தில் தனது கண்டுபிடிப்புக்கு காங்கிரேவ்ஸ் என்று பெயரிட்டார். பின்னர்தான் அவை மேட்ச் தீப்பெட்டி, தீக்குச்சி என்ற பெயரை பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
இன்றைய ஹாலிவுட் படமானாலும் சரி, வெளிநாட்டு படமானாலும் ஒரு சீன்லயாவது கழிவறை இடம் பெறாமல் போவதில்லை. ஆனால் 1960கள் வரையிலும் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் கழிவறையே இடம் பெற்றதில்லை. முதன்முதலாக முக்கிய பாத்திரம் ஒருவர் கழிவறையில் காகிதத்தை கசக்கி எறிந்து, தண்ணீரை திறந்து விடுவதை போன்ற காட்சியை சைக்கோ திரைப்படத்தில் ஹிட்ச்காக் அமைத்திருப்பார். அதன் பிறகே ஹாலிவுட் படங்களில், கழிவறை, குளிலறை, ஷவர் போன்றவை இடம் பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..
போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும். கைக்கு அடக்கமாக உள்ள இதில் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.
கடந்த 1860-ம் ஆண்டு கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். அந்நாட்டில் விளையும் கரும்பு, பருத்தி போன்ற வேளாண் பணிகளுக்காக தமிழகர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். உலக நாடுகளில் வெளிநாட்டு மக்களை முதலில் குடியமர்த்திய முதல் நாடு தென் ஆப்பிரிக்காதான். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாநிலத்தவர்கள் குடியமர்த்தப்பட்ட போது இந்தியா ஒப்பீனியன் என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை தமிழில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் மருந்துகளை, சூரணங்களை தேன் கலந்து நமக்கு பெரியவர்கள் கொடுப்பார்கள்... ஞாபகம் உள்ளதா? அது ஏன் தெரியுமா? மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை தரும். தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரி சுட்டுப்பிடிப்பு
23 Nov 2025கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டார்.
-
கடலூர் கனமழையால் விபரீதம்: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
23 Nov 2025கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கனமழையால், மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் கலெக்டர் மரியாதை
23 Nov 2025கோவை : கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்ட துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிக
-
உத்தரகாண்டில் 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்
23 Nov 2025டேராடூன் : உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
137 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் : விவசாயிகள் மகிழ்ச்சி
23 Nov 2025கூடலூர் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து நேற்று காலை 137 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம்
23 Nov 2025சென்னை : 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
பஞ்சாபில் 50 கி. ஹெராயின் பறிமுதல்
23 Nov 2025சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.
-
கரூர் விவகாரம் குறித்து விஜய் ஒருபோதும் பேசமாட்டார் : டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்
23 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர்.
-
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது
23 Nov 2025பிரேசிலியா : ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார்.
-
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு : பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
23 Nov 2025ஜெருசலேம் : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் சென்றுள்ள நிலையில் அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
23 Nov 2025ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது.
-
கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 முதல் பார்வையிடலாம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Nov 2025கோவை : கோவையில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், டிசம்பர் 1-ம் த
-
வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி மோசடி : சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
23 Nov 2025சென்னை : பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ.
-
திருச்செந்தூரில் திடீரென பல அடி தூரம் உள்வாங்கிய கடல்
23 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் நேற்று திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-11-2025.
23 Nov 2025 -
த.வெ.க. ஆட்சி அமைந்தால்... விஜய் அளித்த வாக்குறுதிகள்
23 Nov 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பல்
-
ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்: தனது அமைதி திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு ட்ரம்ப் மிரட்டல்
23 Nov 2025நியூயார்க் : ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை உக்ரைன மேற்கொள்ள தனது அமைதி திட்டத்தை ஏற்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் இ.பி.எஸ். : நவ.30-ல் கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம்
23 Nov 2025சென்னை : கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
-
ஏன் விஜயை தொட்டோம் என நினைத்து வருந்த போகிறீர்கள் : காஞ்சிபுரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
23 Nov 2025காஞ்சிபுரம் : ஏன் இந்த விஜயை தொட்டோம், ஏன் விஜயுடன் உள்ள மக்களை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்தப் போகிறீர்கள் என்றும், மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள்
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேரணி
23 Nov 2025சென்னை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்.
-
சண்டிகருக்கு தனி கவர்னர்:மத்திய அரசின் திட்டத்துக்கு பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு
23 Nov 2025சண்டிகர் : பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது.
-
இன்றைய ராசிபலன்
23 Nov 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Nov 2025- பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் ரதம்.
- திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் விழா தொடக்கம்.
- திருவெண்காடு, திருக்கழுங்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் இ
-
இன்றைய நாள் எப்படி?
23 Nov 2025


