எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
சென்னை : இலங்கை செல்ல கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது பயணத்தை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்துள்ளார். மீண்டும் இலங்கை செல்ல வாய்ப்பு அமைந்தால், அதை அரசியல் ஆக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
தமிழர்களுக்காக லைக்கா நிறுவனம் கட்டிய வீடுகள் திறந்து வைக்க இலங்கை செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
ரஜினியின் பயணம் ரத்து
இதனை ஏற்று ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், மீண்டும் இலங்கை செல்ல வாய்ப்பு வந்தால் அதை அரசியலாக்க வேண்டாம் என்று ரஜினி காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் புனிதப்போர் நடந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல்வாதியல்ல
தமிழ் மக்களை பார்த்து மனம் திறந்து பேச எண்ணினேன் என்றும், தமிழக மீனவர் பிரச்சினை பற்றி இலங்கை அதிபரிடம் பேச எண்ணியிருந்தேன் என்றும் நான் அரசியல்வாதியல்ல, சினிமா கலைஞன் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் வரவேற்பு
ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் மீது தமக்கு எந்த காழ்புணர்ச்சியும் இல்லை என்றும் கூறியுள்ளார். புனிதப்போர் இப்போதுள்ள சூழ்நிலையில் ரஜினி சென்றால் அது பாதகமாக அமையும் என்று அங்குள்ள தமிழர்கள் கூறினார்கள். இதனாலேயே தான் ரஜினியின் இலங்கை பயணத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார். சிங்களர்களின் புனிதப்போர் அல்ல என்றும் விடுதலைப்புலிகள் நடத்திய புனிதப்போர் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
வைகோ வரவேற்பு
ரஜினியின் அறிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். ரஜினியின் இலங்கை பயணம் பற்றி கேள்விப்பட்ட உடன் அவருடன் தாம் தொலைபேசியில் பேசியதாக கூறிய வைகோ, அங்குள்ள நிலையை விரிவாக எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். விளம்பரத்திற்காக ரஜினியின் பயணத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.
இதே போல ரஜினிகாந்தின் இலங்கை பயண ரத்துக்கு பண்ருட்டி வேல்முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழர்களின் துயரங்களை ரஜினி நேரில் கேட்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இந்த விழாவை அரங்கேற்றுவதன் மூலம் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீள்குடியேற்றம் சிறப்பாகவே நடப்பதாக உலகை நம்ப வைப்பதுடன் இனப்படுகொலை விசாரணையை முடக்கியதற்கு எதிராக எழும் கண்டனங்களை மூடி மறைப்பதுமாகும்.
நட்பு நாடுகளின் உதவியோடு ஐ.நாவில் இனப்படுகொலை விசாரணைக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் பெற்றது மற்றும் பன்னாட்டு நீதிபதிகளை அனுமதிக்காததற்கு தமிழர்களிடமிருந்து கண்டனங்கள் எழும் சூழலிலேயே லைக்காவின் இந்த விழாவை அரங்கேற்றுகிறது இலங்கை அரசு. எனவேதான் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக வேல்முருகன் கூறியுள்ளார். ரஜினியின் அறிவிப்புக்கு அவர் நன்றியும் கூறியுள்ளார்.
பங்கேற்க சம்மதித்தது ஏன் ? ரஜினிகாந்த் விளக்கம்
இலங்கை விழாவில் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்ட உணர்ச்சி மிகு அறிக்கையில்,
"நான் இரண்டு விஷயங்களுக்காக இலங்கை விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.
காரியம்: அந்த வீடுகளைத் திறந்து வைப்பது.
காரணம்: கால காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களின் சுய கவுரவத்துக்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து, தங்களைத் தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப் பார்த்து, அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களைப் பார்க்க வேண்டும், மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 2 days 6 hours ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 5 days 2 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 2 days ago |
-
திருவொற்றியூரில் பயங்கரம்: எருமை மாடு முட்டியதால் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
17 Jun 2024திருவொற்றியூர் : திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி இழுத்து செல்லப்பட்டதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை : திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.
-
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் : இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பறிமாறி உற்சாகம்
17 Jun 2024சென்னை : தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்திற்கு நேரில் நிதியுதவி வழங்கினார் கனிமொழி
17 Jun 2024தூத்துக்குடி : குவைத் தீவிபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்திற்கு நேரில் சென்று ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் தி.மு.க. எம்.பி. கனிமொழி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு
17 Jun 2024சென்னை, : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்: கொத்தையம் கிராம மக்களுக்கு இ.பி.எஸ். உறுதி
17 Jun 2024ரெட்டியார்சத்திரம்: கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று எடப்பாட
-
இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Jun 2024கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
-
சவுதியில் கடும் வெப்ப அலை: ஜோர்டன், ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 19 பேர் பலி
17 Jun 2024சவுதி, கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மலாவியில் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலி
17 Jun 2024லிலாங்வே : மலாவியில் இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
-
ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
17 Jun 2024புதுடெல்லி : மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
17 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்: 53 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொழிலதிபர் வழக்கு
17 Jun 2024லண்டன், தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட
-
முன்னாள் ஜெனரல் விலகல் எதிரொலி: போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
17 Jun 2024டெல்அவீவ், காசா மீதான போர் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முக்கிய உறுப்பினர் விலகல் காரணமாக போர் கேபினட்டை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
-
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
மேற்கு வங்க ரெயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து
17 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று
-
இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்
17 Jun 2024சென்னை : இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.
-
நடுவானில் விமான எஞ்சின் செயலிழப்பு: அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமானம் தரையிறக்கம்
17 Jun 2024வெலிங்டன் : நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்ப
-
விபத்துகள் ஏற்படாத வகையில் ரயில்வே போக்குவரத்தை முழுமையாக கண்காணிக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Jun 2024சென்னை : விபத்துகள் ஏற்படாத வகையில் ரயில்வே போக்குவரத்தை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
-
‘லாந்தர்’ இசை வெளியீடு
17 Jun 2024எம் சினிமா புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லாந்தர்’.
-
காஷ்மீர் ரியாசி தீவிரவாத தாக்குதல்: விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்த மத்திய உள்துறை
17 Jun 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்
-
பிரம்மிக்கவைக்க வரும் பயமறியா பிரம்மை
17 Jun 202469 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக்
-
சிக்னலை புறக்கணித்ததால் கோர விபத்து: மேற்குவங்கத்தில் பயங்கரம்: எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரெயில் மோதி 15 பேர் பலி : ஜனாதிபதி - பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
17 Jun 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகினர்.
-
ஆகஸ்ட்டில் வெளியாகிறது டபுள் ஐஸ்மார்ட்
17 Jun 2024உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றி படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மா