முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரிதா நாயருக்கு கொரோனா அறிகுறி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : பண மோசடி வழக்கில் கைதான சரிதா நாயருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் கண்ணூரில் உள்ள பெண் கைதிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்து கைதானவர் சரிதா நாயர்.  இவர் அப்போதைய கேரள முதல்வர் உம்மண்சாண்டி உள்பட பலர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. 

இந்த நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.  கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 27-ம் தேதி வரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

சிறையில் அடைக்கும் முன்பாக அவரிடம் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் கண்ணூரில் உள்ள பெண் கைதிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே கேரள சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் அரசு மருத்துவமனை விற்பனை கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து ரூ. 25 லட்சத்துக்கும் மேல் பணம் வசூல் செய்ததாக சரிதா நாயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கிலும் நெய்யாற்றின்கரை போலீசார் அவரை கைது செய்தனர். இதுபோல் மேலும் பல வழக்குகளில் சரிதா நாயருக்கு பல கோர்ட்டுகள் கைது வாரண்டுகள் பிறப்பித்துள்ளன.  இதனால் அவர் மீது வரிசையாக வழக்குகள் பாயும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து