முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி கொண்டாட்டங்கள் கூடாது: அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வாக்கு எண்ணிக்கையின் போது, வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்றும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

மே 2-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியன சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அறிக்கை திருப்தி அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி ஒத்துழைக்க அறிவுறுத்தினர். அத்துடன் வெற்றிச் சான்றிதழ் பெறும்போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சிறந்த நடவடிக்கைகள் எடுத்து தலைவர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மே 2-ம் தேதி பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது, ஊர்வலம், பேரணியாக செல்லக் கூடாது என்றும் அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து