முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      விளையாட்டு
26-Anil-Kumble-1

Source: provided

பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் வாக்களித்தார்.

14 தொகுதிகளுக்கு... 

543 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 28 இடங்களைக் கொண்ட கர்நாடகத்தில், உடுப்பி சிகாமகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாமராஜநகர், பெங்களூரு கிராமம், பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, சிக்பல்லாபூர், கோலார். ஆகிய 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது.

டிராவிட் - கும்ப்ளே... 

கர்நாடகத்தில் 2019 தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த முறை பாஜக 25 இடங்களில் போட்டியிடுகிறது, மீதமுள்ள 3 இடங்களில் அதன் மாநில கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் போட்டியிடுகிறது. ஜேடிஎஸ் ஹாசன், மாண்டியா மற்றும் கோலார் ஆகிய மூன்று தொகுதிகள் போட்டியிடுகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோன்று டிராவிட்டின் முன்னாள் சக வீரரும், பழம்பெரும் இந்திய சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே பெங்களூருவில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து