எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக மாநில திட்டக்குழு தயாரித்த 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் உள்ளிட்ட 4 அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (ஜூன் 9) தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி - தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள்: தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வேளாண் சாரா பணிகளில் தன்மை மற்றும் அளவினை அறிந்து கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் வேளாண் சாரா வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு மாநிலத் திட்டக் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தமிழ்நாட்டின் அதிக வேளாண் சாராத பணிகளைக் கொண்டுள்ள மாவட்டங்கள் மற்றும் குறைந்த அளவு வேளாண் சாராத பணிகளைக் கொண்டுள்ள ஆறு மாவட்டங்களிலுள்ள 12 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், வேளாண் பணிகளிலிருந்து, அதிகளவில் வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டடம் மற்றும் உற்பத்தி துறைகள் போன்ற வேளாண்மை சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 75%-க்கும் அதிகமான ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50%-க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் வேளாண்மை அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை உள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இது 2012-க்குப் பிறகு வேளாண்மைத் துறையின் சதவீதத்தில், 20% குறைந்துள்ளது என்பதையும் குறிக்கிறது.
இது ஊரக வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தைக் காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, 15 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக இருந்து வருகிறார்கள் எனத் தெரியவருகிறது. அதிக ஊதியமும் நிலையான வேலைவாய்ப்புகளும் இளைஞர்களை வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளுக்கு ஈர்த்துள்ளன. கட்டடத் தொழில் இளைஞர்களிடையே, முதன்மையான துறையாகவும், பெண்களிடையே உற்பத்தித்துறை முக்கிய வேலைவாய்ப்பு துறையாகவும் உருவெடுத்துள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030- “நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்” - இது தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சார்பில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, 2030-ம் ஆண்டுக்கான வளர்ச்சி திட்டமான நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் உள்ள 17 இலக்குகள் வாரியாக அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த ஆவணம் பல்வேறு இலக்குகளில் மாநிலத்தின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், சிறப்பு முயற்சிகள் மற்றும் கொள்கை உருவாக்கங்கள் மூலம் தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆவணம், ஒவ்வொரு இலக்கினை அடைவதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டங்களையும் கொண்டுள்ளது.
இந்த அறிக்கை தமிழகத்தின் வாகன உற்பத்தி துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியை விவரிக்கிறது. வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலைக்கு ஏற்ப மற்றும் நிலைத்த தன்மையுடன் கூடிய வலுவான அடித்தளத்தை உருவாக்க உள்ளது என்று இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் நிலைத்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உற்பத்தித் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இவ்வறிக்கை, அனைவருக்கும் பயனளிக்கும் ஒருங்கிணைந்த மற்றும் செம்மையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, சமூக நீதி மற்றும் அறிவுசார் பரிணாமத்தை ஒருங்கிணைக்கும் விரிவான செயல்திட்டமாக இவ்வறிக்கை அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்
09 Jun 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
லிசி ஆண்டனி நடிக்கும் குயிலி
09 Jun 2025B M ஃபிலிம் இன்டர்நேஷனல் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப.
-
தக் லைஃப் திரை விமர்சனம்
09 Jun 2025கமல்ஹாசன் குழுவினர் டெல்லியில் தாதாவாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எதிரி. இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார்.
-
த.வெ.க.வில் இணைந்த தி.மு.க., அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
09 Jun 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று இணைந்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு போட்டியாக பாக்., எம்.பி.க்கள் இங்கி. பயணம்
09 Jun 2025லண்டன் : இந்தியாவுகு போட்டியாக பாகிஸ்தான் எம்.பி.க்கள் இங்கிலாந்துக்கு பயணம் செய்தனர்.
-
‘திருக்குறள்’ இசை வெளியீட்டு விழா
09 Jun 2025காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ’வெல்கம் பேக் காந்தி’ (Welcome Back Gandhi) என்ற பெயரிலும் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
09 Jun 2025புதுடில்லி : எங்கள் கூட்டு வெற்றியை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். 'நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சாந்தனு அஞ்சலி நாயர் நடிக்கும் மெஜந்தா
09 Jun 2025பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்கும் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் இணைந்து
-
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி: இந்திய விண்வெளி வீரர் நெகிழ்ச்சி
09 Jun 2025புதுடில்லி : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று (ஜூன் 10) பயணம் செய்ய உள்ள நிலையில், ''நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா நெகிழ்ச்சிய
-
சென்னை: விமானத்தில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல்
09 Jun 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-06-2025.
09 Jun 2025 -
விமானத்தில் ஏறும்போது தடுமாறிய அதிபர் ட்ரம்ப் : சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
09 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் விமானத்தில் ஏறும்போது தடுமாறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
பேரன்பும் பெருங்கோபமும்’ விமர்சனம்
09 Jun 2025தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றும் நாயகன் விஜித் பச்சான், குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கும் பல அதிர்ச்சிகர
-
நாமக்கல்லில் தனியாக இருந்த மூதாட்டி குத்தி கொலை: 4 தனிப்படை அமைப்பு
09 Jun 2025நாமக்கல் : நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
ஜூன் 13 வெளியாகும் ஆலப்புழா ஜிம்கானா
09 Jun 2025காலித் ரஹ்மான் இயக்கத்தில், காலித் ரஹ்மான் ஜோபின் ஜார்ஜ், சமீர் கரட் மற்றும் சுபீஷ் கண்ணஞ்சேரி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் ஆலப்புழா ஜிம்கானா.
-
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு: அமைச்சர் அறிவிப்பு
09 Jun 2025சென்னை : பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
‘பரமசிவன் பாத்திமா’ திரை விமர்சனம்
09 Jun 2025திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு மலை கிராமங்கள் உள்ளது. ஒன்று கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம்.
-
கல்வி நிதி வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
09 Jun 2025புதுடில்லி : மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
பா.ஜ.வின் 11 ஆண்டு கால ஆட்சி அர்ப்பணிப்புகளின் பொற்காலம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
09 Jun 2025புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொது சேவைகளின் அர்ப்பணிப்புகளின் பொற்காலம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு
09 Jun 2025காந்தி நகர் : குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
-
அடிப்படை வசதியில்லாத வேளாண்மை கல்லூரி: அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு
09 Jun 2025சென்னை, கரூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
தி.மு.க. அரசைப்பற்றி பேச உரிமை கிடையாது: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்
09 Jun 2025சென்னை : தி.மு.க. அரசைப் பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
-
காசாவுக்குள் நுழைய முயன்ற கிரெட்டா தன்பெர்க் கைது
09 Jun 2025ஜெருசலேம் : கடல் வழியாக கப்பலில் காசாவுக்குள் நுழைய முயன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டார்.
-
மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு
09 Jun 2025மும்பை, மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
நாமக்கல் மூதாட்டி கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
09 Jun 2025சென்னை : நாமக்கல் மூதாட்டி கொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.