எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர், ஏப்.- 8 - திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீரை கடல்நீரில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூரில் ஜெயலலிதா உறுதி. நேற்று திருப்பூரில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவினாசி வேட்பாளர் கருப்பசாமி, பல்லடம் வேட்பாளர் பல்லடம் பரமசிவம், திருப்பூர் வடக்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் தங்கவேல் ஆகியோர்களை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.
கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட, சுதந்திரம் பெற இந்தத் தேர்தல் பொன்னான வாய்ப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னுக்குத்தள்ளி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கருணாநிதி நடைபெற்ற எந்த ஒரு சம்பவத்திற்கும் நடவடிக்கை எடுத்ததில்லை.
தா.கிருஷ்ணன் கொலைவழக்கு, பனையூர் இரட்டைக் கொலை வழக்கு, அமைச்சர் பரிதி இளம்வழுதி தாக்கிய சம்பவம் குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேச கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின்மிகை மாநிலமான தமிழ்நாடு மின்வெட்டு மாநிலமாக மாறியதுதான் கருணாநிதியின் சாதனை. மின் உற்பத்திக்கு எந்த ஒரு திட்டத்தையும் கருணாநிதி அரசு மேற்கொள்ளவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டம், எல்லாத் துறைகளிலும் லஞ்சம், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் செய்யும் இந்த ஆட்சி எப்போது போகும் என்று ஏங்கும் அளவிற்கு தமிழகத்தைச் சீரழித்துவிட்டார். தன் குடும்பம் வளம் பெறவேண்டும், வேறு யாரும் தொழில் செய்யக் கூடாது என்று திரைப்படத் துறையை குடும்பத்துறையாக்கிவிட்டார். கிரானைட்,மணல் கொள்ளை, கேபிள் டி.வி. என கருணாநிதி குடும்பமே கொள்ளையடிக்கிறது.
இதில் 6வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கருணாநிதி உங்களை நாடிவருகிறார். ஏமாந்துவிடாதீர்கள். தமிழினப பாதுகாவலர் என்று கூறும் கருணாநிதி தமிழர்களை அழித்தபோது, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் நாடகம் நடத்தினார். ஒரே நாளில் இலங்கையில் தமிழர்களை கொன்றதை வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி. அ.தி.மு.க மத்திய அரசில் இருந்திருந்தால் வாபஸ் பெற்றிருக்கும். தமிழினத்தை அழித்த கருணாநிதி 6வது முறையாக முதல்வராக வரவேண்டும் என்று கேட்கிறார். வாக்காளர்கள் சிந்தித்து செயல்படுங்கள்.
செம்மொழி மாநாடு நடத்தி தன் குடும்ப உறுப்பினர்களை முன்வரிசையில் அமரவைத்து கெளரவப்படுத்தினார். தமிழ் அறிஞர்கள் அவர்களுக்குப் பின் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை கெளரவிப்பதற்கும், கனிமொழிக்கு முன்னுரிமை கொடுக்கவுமே செம்மொழி மாநாடு நடத்தினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழி, ராஜாத்தி, தயாநிதி ஆகியோர் பலனடைந்தனர். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராசா சிறையில் இருக்கிறார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
இதையெல்லாம் செய்து விட்டு கருணாநிதி வாக்குக் கேட்டு வருகிறார். தமிழக மக்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை குடும்பத்துடன் விரட்டி அடியுங்கள். நீங்கள் அதற்கு இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துங்கள்.
திருப்பூரில் விவசாய நிலங்கள் மாசுபடாத வண்ணம் சாயக்கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர். ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள சாயக்கழிவு நீரை கடல்நீருக்குக் கொண்டு செல்லும் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும். திருப்பூரில் தொழிற்சாலைகளிலிருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதிக்கும் 10 சதவீத கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்துவேன். திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக நடவடிக்கை எடுப்பேன்.
அனைவருக்கும்20 கிலோ தரமான இலவச அரிசி கிடைத்திட, தாய்மார்களுக்கு இலவச பேன், மிக்சி,கிரைண்டர் இலவசமாக வழங்கிட, பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கிட, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியரும் இலவச லேப்டாப் பெற்றிட, 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக 1000 முதல் 5000 ரூபாய் வரை வழங்கிட, வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் அளித்திட, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 1,80,000 ரூபாய் செலவில் 300 சதுர அடியில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தந்திட, முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திட, கேபிள் தொழிலை அரசுடமையாக்கி அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி இணைப்பு குறைந்த கட்டணத்தில் கிடைத்திட, 60000 பால் கறவை மாடுகளை இலவசமாக 6000 கிராமங்களுக்கு அளித்திட, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4ஆடுகள் இலவசமாக வழங்கிட, கரும்புக்கான கொள்முதல்விலையை 2500 ரூபாயாக உயர்த்திட, விவசாயிகளுக்கு இலவசமாக சொட்டு நீர் பாசன வசதி செய்து தந்திட, விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைத்திட, சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் அளவிற்கு வழங்கும் கடனில் 25 விழுக்காடு மானியம் அளித்திட, 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையுடன் மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கிட, 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கிட, தடையில்லா மின்சாரம் பெற்றிட, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரியஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கிட, தமிழகம் எங்கும் உள்ள குடிநீர் பிரச்சனைகள் தீர, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, கட்டுக்கடங்காமல் ஏறியுள்ள விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்த, சாலை இல்லாத ஊர்கள் சாலை வசதி பெற்றிட, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திட, கடந்த 5 ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆகிய உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பினையும் உறுதி செய்திட, தொழில் வளம் பெருக, தொழில் அமைதியை உறுதி செய்திட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட, சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, பாதாள சாக்கடைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட, கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டத்தினை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களைத்தொடர்ந்து செயல்படுத்திட, ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழ்நாட்டில் மக்களை மீட்டிட, கருணாநிதி குடும்பத்தினர் உட்பட தி.மு.கவினரால் ஏழை எளிய மக்களிடமிருந்து மிரட்டிவாங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்திட, ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்2 days 6 hours ago |
ஜூசி க்ரீன் சிக்கன்5 days 2 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 2 days ago |
-
திருவொற்றியூரில் பயங்கரம்: எருமை மாடு முட்டியதால் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
17 Jun 2024திருவொற்றியூர் : திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி இழுத்து செல்லப்பட்டதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை : திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.
-
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் : இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பறிமாறி உற்சாகம்
17 Jun 2024சென்னை : தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்திற்கு நேரில் நிதியுதவி வழங்கினார் கனிமொழி
17 Jun 2024தூத்துக்குடி : குவைத் தீவிபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்திற்கு நேரில் சென்று ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் தி.மு.க. எம்.பி. கனிமொழி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு
17 Jun 2024சென்னை, : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்: கொத்தையம் கிராம மக்களுக்கு இ.பி.எஸ். உறுதி
17 Jun 2024ரெட்டியார்சத்திரம்: கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று எடப்பாட
-
இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Jun 2024கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
-
மலாவியில் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலி
17 Jun 2024லிலாங்வே : மலாவியில் இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
-
சவுதியில் கடும் வெப்ப அலை: ஜோர்டன், ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 19 பேர் பலி
17 Jun 2024சவுதி, கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்: 53 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொழிலதிபர் வழக்கு
17 Jun 2024லண்டன், தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
-
தங்கம் விலை சற்று சரிவு
17 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
17 Jun 2024புதுடெல்லி : மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
முன்னாள் ஜெனரல் விலகல் எதிரொலி: போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
17 Jun 2024டெல்அவீவ், காசா மீதான போர் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முக்கிய உறுப்பினர் விலகல் காரணமாக போர் கேபினட்டை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட
-
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
நடுவானில் விமான எஞ்சின் செயலிழப்பு: அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமானம் தரையிறக்கம்
17 Jun 2024வெலிங்டன் : நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்ப
-
மேற்கு வங்க ரெயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து
17 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று
-
இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்
17 Jun 2024சென்னை : இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.
-
விபத்துகள் ஏற்படாத வகையில் ரயில்வே போக்குவரத்தை முழுமையாக கண்காணிக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Jun 2024சென்னை : விபத்துகள் ஏற்படாத வகையில் ரயில்வே போக்குவரத்தை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
-
‘லாந்தர்’ இசை வெளியீடு
17 Jun 2024எம் சினிமா புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லாந்தர்’.
-
காஷ்மீர் ரியாசி தீவிரவாத தாக்குதல்: விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்த மத்திய உள்துறை
17 Jun 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்
-
பிரம்மிக்கவைக்க வரும் பயமறியா பிரம்மை
17 Jun 202469 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக்
-
சிக்னலை புறக்கணித்ததால் கோர விபத்து: மேற்குவங்கத்தில் பயங்கரம்: எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரெயில் மோதி 15 பேர் பலி : ஜனாதிபதி - பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
17 Jun 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகினர்.
-
ஆகஸ்ட்டில் வெளியாகிறது டபுள் ஐஸ்மார்ட்
17 Jun 2024உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றி படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மா