எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,டிச.8 - தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்புக்குழு நேற்று உத்தரவிட்டது. மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக நடுவர்மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை அரசிதழில் இம்மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடுகிறதா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஆறுதல் கிடைத்துள்ளது.
காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழகத்திற்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சுப்ரீம்கோர்ட்டில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், தமிழகத்தின் சார்பில் தனது வாதங்களை எடுத்து வைத்தார். சம்பா பயிர் கருகும் நிலையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கர்நாடகம் சார்பில் ஆஜரான் வழக்கறிஞர் அனில்திவான் தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 5-ம் தேதி அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில் தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நாளை வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்தார். அதே நாளில் விவசாயிகளுக்கு அடுக்கடுக்கான சலுகைகளையும் அவர் அறிவித்தார். இதையும் மீறி பயிர் இழப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ. 13 ஆயிரத்து 692 வரை நிவாரணம் அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்டு அத்தோடு நில்லாமல் கண்காணிப்புக்குழுவையும் உடனே கூட்டி இருமாநில தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவுப்படி காவரி கண்காணிப்புக்குழு டெல்லியில் நேற்று அதன் தலைவர் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்தில் தமிழகம் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தியது. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 36 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும். டிசம்பர் மாதத்திற்கு 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். அதன் பிறகு ஜனவரி மாதத்திற்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் ஆக மொத்தம் 43 டி.எம்.சி.தண்ணீரை தர வேண்டும் என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கம்போல் கர்நாடக அரசு அதை நிராகரித்தது. இதையெல்லாம் மற்ற மாநிலங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டியிருந்தன. அதன் பிறகு கண்காணிப்புக்குழு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது. மேலும் நடுவர்மன்றம் அளித்த இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட இந்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன் என்று மத்திய அரசுக்கு சமீபத்தில்தான் சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது நினைவிருக்கலாம். மேலும் கண்காணிப்புக்குழு உத்தரவுப்படி 12 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிடுகிறதா இல்லையா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை எல்லாம் தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இருந்தாலும் இந்த தண்ணீரால் சம்பா பயிரை காப்பாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே. இதனிடையே காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் வரும் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதை உணர்ந்தோ என்னவோ கர்நாடக அரசு நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அவசர அவசரமாக தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. காலையில் தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் பிடிவாதமாக கூறினார். ஆனால் நள்ளிரவுக்கள் தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு அணையின் ஷட்டர்களை திறந்துவிட்டுள்ளார் முதல்வர் ஷெட்டர். எப்படியோ தமிழகத்திற்குரிய தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.