முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டால்பின் பள்ளி மாணவன் அஸ்வின் குமார் தேசிய சதுரங்கப் போட்டிக்கு தேர்வு

திங்கட்கிழமை, 23 மே 2011      விளையாட்டு
Image Unavailable

மதுரை, மே. - 23 - திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சதுரங்கப் போட்டியின் மூலம். மதுரையைச் சேர்ந்த டால்பின் பள்ளி மாணவன் அஸ்வின் குமார் தேசிய சதுரங்கப் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறான். இது பற்றிய விபரம் வருமாறு - பைபாஸ் ரோடு, பொன்மேனி, மதுரை டால்பின் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியின் 3 -ம் வகுப்பு மாணவன் அஸ்வின் குமார் திருச்சியில் 13 முதல் 19 -ம் தேதி வரை நடைபெற்ற 24 - வது தமிழ்நா டு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாவட்டத்தின் சார் பாக, கலந்து கொண்டார்.
இவர் இப்போட்டியில் 11 சுற்றுக்கு 4 புள்ளிகள் பெற்று 4 -ம் இடத்தை வென்று அதன் மூலம் தேசிய சதுரங்க போட்டிக்கு தமிழ்நாடு மாநில த்தின் சார்பாக கலந்து கொள்ள தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பூனாவில் நடைபெற உள்ள தேசிய யு - 7 வயது சதுரங்கப் போட்டியி ல் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பாக, விளையாட தேர்வு பெற்று கலந் து கொள்ள இருக்கும் அஸ்வின் குமாருக்கு டால்பின் பள்ளியின் சார் பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டால்பின் பள்ளி தாளாளர் ஏ.ஆர். ராமனாதன், மாணவன் அஸ்வின் குமாருக்கு நினைவுப் பரிசனை வழங்கினார். டால்பின் பள்ளி முதல் வர் ஏ. பத்மா மாணவன் அஸ்வின் குமாரையும், அவனுக்கு பயிற்சி யளித்த பயிற்சியாளர் ரமணன் மற்றும் பள்ளியின் தலைமைப் பயிற்சி யாளர் எம். திருநாகலிங்கத்தையும் பாராட்டி, மேலும், டால்பின் பள் ளியின் சதுரங்க வீரர்கள் மாநில மற்றும் தேசிய சதுரங்கப் போட்டியி ல் கலந்து கொண்டு மேலும் பல சாதனைகளை பெற வாழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்