முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் வீரர்களின் ஆட்டமே வெற்றிக்கு காரணம்: ரெய்னா

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

ஆண்டிகுவா, ஜூன்- .13 - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பலவீனமானது அல்ல. இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதாலேயே வெற்றி பெற்றோம் என்று இந்திய கேப்டன் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பலவீனமானது என்றார்கள். இப்போது மேற்கிந்திய தீவுகள் அணியை பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியிடம் முதல் இரு, ஒரு நாள் போட்டிகளில் தோல்வி கண்டது மேற்கிந்திய தீவுகள் அணி. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி பலம் குறைத்து கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ரெய்னாவிடம் கேட்ட போது,
இந்த விஷயத்தில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்பதுதான் உண்மை. அதனாலேயே வெற்றி பெற்றோம். இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 15 ஓவர்களில் 83 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் முன்னதாக களமிறங்கியது குறித்து பேசிய அவர், அது பயிற்சியாளரின் திட்டம். மேற்கிந்திய தீவுகள் அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் மிடில் ஓவர்களில் வலது இடது கை பேட்ஸ்மேன்கள் இறங்கினால் நன்றாக இருக்கும் என பிளட்சர் நினைத்தார் என்றார்.
மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியை பலவீனமாக கருதவில்லை. சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட கூடிய வீரர்களை கொண்ட அணி. அவர்கள் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி வந்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது. இளம் இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறதா என்று கேட்ட போது, இப்போதுள்ள இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட திறமையான அணி என்பதையே இது காட்டுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சிலருக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இப்போதுள்ள இந்திய அணி திறமையான அணி என்றார் பிளட்சர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்