எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல்,ஜூன்.17 - நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறைகளின் பணி ஆய்வு கூட்டம் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் பி. தங்கமணி தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் தனபால், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளார். அதனடிப்படையில்தான் அனைத்து அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக வருவாய் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, விபத்து நிவாரணம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள், இயற்கை மரணம், விதவை உதவித் தொகை போன்ற அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சராசரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிற மனுநீதி நாள் முகாமில் 300 க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிவு செய்து ஒரு மாத காலத்திற்குள் புதிய தீர்வினை மனுதாரருக்கு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 65 ஆயிரத்து 311 பேர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் எவ்வித குறைபாடுமின்றி தரமான அரிசியை நியாய விலைக் கடைகள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டாலோ, அல்லது அரிசி கடத்தல் நடந்தாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரித்து பகுதிநேர கடைகள் உருவாக்கவும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் சுலபமான முறையில் மக்கள் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல சொந்தக் கட்டிடத்தில் இயங்காத நியாய விலைக் கடைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நியாய விலைக் கடைகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அறிவித்தபடி குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தால் ரூ. 5 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும். பட்டா மாறுதல் கேட்டு கிராம அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்தாலே போதுமானது. சட்டம் ஒழுங்கை காப்பதில் காவல் துறை உரிய முயற்சியை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
முதல்வர் அறிவித்தபடி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கப்படுவதுடன் அதன் பயன்பாடு குறித்து அவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து சொல்ல வேண்டும். பொது மருத்துவத் துறை மற்றும் சுகாதார துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டிட வசதிகள், நவீன சிகிச்சைக்கான கருவிகள் ஆகியவற்றை வழங்கவும், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் தற்போதுள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சையளிக்க வேண்டும்.
கிராமங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் ஆகிய துறை அலுவலர்கள் கலந்து பேசி குடிநீர் வழங்கும் பணியை முறைப்படுத்திட வேண்டும். பிற்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கு விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள், உரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் ஆகியவற்றை அமைத்திட வேண்டும். இது போன்ற அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியுள்ள நபர்களுக்கு கிடைத்திட அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.