LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஜூலை.21- சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 10 பேரை பிடிக்க 12 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த 31 குடும்பத்தினரை ஒரு நாள் திடீரென நள்ளிரவில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அவர்களை அடித்து விரட்டி சொற்ப தொகை கொடுத்து மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். பின்னர் அந்த நிலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் கவுசிக nullபதி பெயரில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர் .ஆனால் போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஜட்ஜ் அமைச்சர் வீராபண்டி ஆறுமுகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டும் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நில விவகாரத்தில் அப்போதைய அரசு அதிகாரிகள் அனைவரும் அமைச்சருக்கு ஆதரவாகவே இருந்தனர்.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.ஆட்சி அமைத்தால் நிலத்தை பறி கொடுத்தவர்களுக்கு அபகரித்தவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதே போல் சேலத்தில் பிரச்சாரத்திற்கு வந்த போதும் அங்கம்மாள் காலனி நிலம் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் பேசினார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நில மோசடிகளை விசாரிக்கவே தனிப்பிரிவை ஏற்படுத்தினார். மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் தனிப்பிரிவு போலீசாரிடம் வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பாதிக்கப்பட்ட அங்கம்மாள் காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் தங்கள் நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் மகரnullஷணம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திற்கு பரிந்துரை செய்தார். அவர் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவர்கள் இந்த வழக்கை விசாரித்து அங்கம்மாள் காலனி நில அபகரிப்பில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 147( அத்துமீறல்), 148 பயங்க ஆயுதங்களால் கலகம் விளைவித்தல்) 447(அத்துமீறி உள்ளே நுழைதல்), 109 (குற்றம் செய்ய தூண்டுதல்), 467(நம்பிக்கை மோசடி), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய ஏழு பிரிவுகளில் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாகவும் அதில் தொடர்புடைய அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், உறவினர் கவுசிகnullபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, தி.மு.க.கவுன்சிலர் ஜிம் ராமு, ஆட்டோ முருகன், பீடாகடை கனகராஜ், சித்தானந்தம் கறிக்கடை பெருமாள், அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ.பாலகுருசாமி, அப்போதைய பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது நேற்று முன் தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், பீடா கடை கனகராஜ் ஆகியோரை நேற்று முன் தினம் இரவே போலீசார் கைது செய்தனர்.
இதே போல் சேலம் 5 ரோட்டில் உள்ள சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே பிரிமியர் ரோலர் மில்ஸ் சொந்தமான நிலம் இருந்தது. இதன் பங்குதாரர்களாக கே.வெங்கடாஜலம், வி.ரவிச்சந்திரன், வி.வேணுகோபால், வி.பாலாஜி ஆகியோர் இருந்தனர். இந்த நிலத்தின் பேரில் வெங்கடாஜலம் என்பவர் ரூ.3 கோடிக்கு பவர் எழுதிக் கொடுத்து ஆடிட்டர் துரைசாமி என்பவரிடம் ரூ.3 கோடி கடன் வாங்கியிருந்தார். அதற்கான வட்டி தொகையையும் கொடுத்துவந்துள்ளார். பின்னர் நிலத்தை மீட்க செல்கையில் அவர் நிலம் தரமுடியாது பவர் எழுதிக்கொடுத்ததால் நிலம் எனக்கு சொந்தம் என கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் இதில் தலையிட்டு வெங்கடாஜலத்தை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. பின்னர் அந்த நிலத்தை சேலத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அவரது மகன் ராமநாதன், மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோருக்கு ரூ.30 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். அதில் சொற்ப தொகையான 7 கோடியை வெங்கடாஜலத்திற்கு கொடுத்துவிட்டு மற்ற பணத்தை வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பலர் பங்கிட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த வெங்கடாஜலம் இறந்தே போனார்.
இந்த நிலையில் வெங்கடாஜலத்தின் மகன் ரவிச்சந்திரன் என்பரும் இந்த நிலம் அபகரிப்பு குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் கொடுத்தார். அவர் இது குறித்து விசாரிக்க மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இந்த நில அபகரிப்பில் தொடர்புடைய முதல் குற்றவாளியாக வீரபாண்டி ஆறுமுகம், ஆடிட்டர் துரைசாமி, அவரது மகன் அசோக் துரைசாமி,சி.துரைசாமி, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அழகாபுரம் தி.மு.க.செயலாளர் அழகாபுரம் முரளி, ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், மகன் ராமநாதன், சீனிவாசன் மனைவி ராஜேஸ்வரி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.85 கோடியாகும்.
மேற்கண்ட 2 வழக்குகளிலும் வீரபாண்டி ஆறுமுகம் முதல்குற்றவாளி என்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அங்கம்மாள் காலனி நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடினர் .அவர்களிடம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியல் மில்ஸ் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த இரண்டு வழக்கிலும் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களை கண்டு பிடித்து கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் இந்த வழக்குகளில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தரப்பில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.ஆனால் போலீசாரோ முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்குள் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க.வினர், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரி,மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்ட பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தி.மு.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் வெஜிடபிள்![]() 1 day 6 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 9 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 9 hours ago |
-
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது
11 Aug 2022தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 11-08-2022.
11 Aug 2022 -
போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
11 Aug 2022போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கொரோனாவை வென்று விட்டோம்: வடகொரிய அதிபர் கிம் பெருமிதம்
11 Aug 2022கொரோனாவை வென்று விட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
-
75-வது சுதந்திர தின விழா: சென்னையில் நடந்த 2-வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி
11 Aug 2022நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று 2-வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
-
75-வது சுதந்திர தினம்: சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலைநிகழ்ச்சி
11 Aug 2022சென்னை: 75-வது சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
-
பொறியியல் படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்கள் 22,000 பேர் விண்ணப்பம்
11 Aug 2022பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக 22 ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
-
உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்தது கராச்சி
11 Aug 2022பாகிஸ்தானின் கராச்சி நகரம் உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
-
குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்: உலக சுகாதார அமைப்பு கவலை
11 Aug 2022குரங்கு அம்மை நோய் பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
-
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டு பத்திரம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
11 Aug 2022சென்னை தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திரு
-
பிரதமர் மோடி உட்பட 3 பேர் அடங்கிய சர்வதேச அமைதி ஆணையம் அமைக்க ஐ.நா.வுக்கு மெக்ஸிகோ அதிபர் பரிந்துரை
11 Aug 2022மெக்ஸிகோ சிட்டி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 169-வது நாளை எட்டியது. போரால் உக்ரைனை சேர்ந்த 1.2 கோடி பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
-
பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு
11 Aug 2022சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
11 Aug 2022சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
-
வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாட்டிய நாடகம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
11 Aug 2022சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6.00 மணியளவில் முதல்வர் மு.க.
-
மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு: இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
11 Aug 2022இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர் நாட்டை விட்டு வ
-
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: பிரச்சார குறும்படத்தையும் துவக்கி வைத்தார்
11 Aug 2022சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்
-
தொடர்ந்து 26-வது நாளாக நீடிக்கும் : மேட்டூர் அணையின் நீர்மட்டம்
11 Aug 2022சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
-
இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை
11 Aug 2022இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஓணம் பண்டிகை: சென்னை , நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
11 Aug 2022சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
வேலூரில் அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர் போலீசாரால் கைது - ஒப்பந்தமும் ரத்து
11 Aug 2022வேலூர்: வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் தங்கப்பொருள் கண்டுபிடிப்பு
11 Aug 2022செய்துங்கநல்லூர்: முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டில் மாஸ்க் கட்டாயம் தலைமை நீதிபதி உத்தரவு
11 Aug 2022புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
-
பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் 6 மாத பயிற்சி
11 Aug 2022சென்னை ஐ.ஐ.டி.யின் பிரவர்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வேர் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயார் நிலையில் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்க
-
கிரீஸ் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 அகதிகள் மாயம்
11 Aug 2022கிரீஸ் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 50 பேரை காணவில்லை என்று கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது ஐகோர்ட்டு
11 Aug 2022சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.