எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அக்.14 - மக்கள் வரிப்பணத்தை கபளீகரம் செய்த தி.மு.க.வினருக்கு பாடம் புகட்டுங்கள் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க முன்னாள் இணைச் செயலாளருமான எஸ்.முத்துமணி பேசினார்.
மதுரை அலங்கார் தியேட்டர் அருகில் ஆவின் சந்திரன் தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 72 வது வார்டுக்குப் போட்டியிடும் வேட்பாளர் பி.குமார் ஆகியோரை ஆதரித்து அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் இணைச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.முத்துமணி கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது வருமாறு:-
கடந்த 15 ஆண்டு காலமாக தி.மு.க.விடம் இருந்த மதுரை மாநகராட்சி பல்வேறு வகைகளில் சீரழிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் திட்டங்களான மழைநீர் வடிகால் திட்டம், வைகை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம், நகர்ப்புற ஏழை வீட்டு வழித்திட்டம் ஆகிய எந்த திட்டமும் தி.மு.க.மாநகராட்சியால் முறையாக முழுமையாக முடிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேற்கண்ட திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ. 1,800 கோடியாகும். இந்த திட்டங்கள் தொடங்கும் முன்பே இதற்கான கமிஷன் தொகை ரூ. 180 கோடி ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து தி.மு.க.வினர் பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இத்திட்டங்களுக்கான மதுரை மாநகராட்சி தனது பங்குத்தொகையாக 30 சதவீதம் நிதி செலுத்தும்பட்சத்தில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் அளிக்கும். ஆனால் முந்தைய தி.மு.க. மாநகராட்சி தனது பங்கீட்டுத் தொகையை திட்ட வகைக்கு முறையாக செலுத்தாததால் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் முதல் திட்டப் பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கிக் கிடக்கின்றன. எந்த பணிக்கும் உரிய தொகையை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்காமலேயே தி.மு.க. மாநகராட்சிக்கு சென்றுவிட்டதால் ஒப்பந்தக்காரர்கள் நிலுவைத் தொகையை பெற்று வேலையை துவக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள்தான் என்பதை உணரவேண்டும்.
மேலும் தி.மு.க. மாநகராட்சியில் கீழ்க்காணும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தார்களின் பக்கபலத்தால் மதுரை மாநகராட்சி பொறுப்பிற்கு வந்தவர்களும், தி.மு.க.வினர் சிலரும் சேர்ந்து பினாமி கம்பெனிகளை உருவாக்கி அதன் பெயரில் சுமார் 46 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்த பணிகள் எடுத்து அதை முழுமையாகவும், முறையாகவும் முடிக்காமல் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. மதுரை மாநகராட்சியின் விதிமுறைப்படி ஆண்டு வருவாயில் 49 சதவீதத்திற்குள்தான் எஸ்டாபிளிஷ்மெண்ட் செலவு செய்யப்பட வேண்டும். ஆனால் 70 சதவீதம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பராமரிப்பு பணிகளுக்கு என 1,800 ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் மேயர் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கிட்டு இந்த ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து சம்பளம் பெற்று தங்களது பாக்கெட்டுகளை நிரப்பிக்கொண்டார்கள். வரி சீர்திருத்தம் என்ற பெயரிலும் ஊழல் நடந்துள்ளது. அதாவது தி.மு.க. அரசு வணிகக் கட்டிடங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு சதவீதம் வரி உயர்வு பெறவேண்டுமென அரசாணை பிறப்பித்து அதனை முறையாக அமுல்படுத்தவில்லை. மாறாக அரசாணையை காட்டியே வணிகக் கட்டிட உரிமையாளர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு நடுத்தர ஏழை மக்களின் வீட்டு வரியை உயர்த்தி வரிசீரமைப்பு என்ற பெயரில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுவும் தி.மு.க.வினரின் ஒரு நூதன ஊழலாகும்.
நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் தங்களின் பினாமி பெயர்களில் வீடுகளை ஒதுக்கிக்கொண்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. விரைவில் உண்மைகள் மக்கள் மத்தியில் அம்பலத்திற்கு வரும். கடந்த 15 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 66 பள்ளிகளில் பணியாற்றிவரும் மொத்த ஆசிரியர்கள் 570 பேர்களின் பொது வருங்கால வைப்பு நிதியை வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தவில்லை. அங்கேயும் தி.மு.க.வினர் பல்வேறு வகையான ஊழல் செய்ததே இந்த பரிதாப நிலைக்கு காரணமாகும். மாநகராட்சி ஊழியர்களுக்கு பிரதி மாதம் 15 ம் தேதிக்கு முன்பு சம்பளம் வழங்கப்படுவதே இல்லை. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாடு அரசால் மதுரை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட ஆணையாளர், முதல்வரின் உத்தரவுப்படி உரிய முறையில் பணிகளை மேற்கொண்டு பிரதி மாதம் 1 ம் தேதியே கடந்த ஜூலை மாதம் முதல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் முந்தைய தி.மு.க. மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் 220 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்வரின் ஆணையின்பேரில் மேற்கண்டவர்களுக்கு ஓய்வூதியப் பயன் தொகையாக ரூபாய் இரண்டரைக் கோடி இப்போது வழங்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க. அரசின் சாதனையாகும்.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தி.மு.க. ரவுடிகளிடம் சிக்கித்தவித்த மதுரை மாநகரம், அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுத்த முதல்வருக்கு மதுரை மக்கள் தங்கள் நன்றிபெருக்கை காட்டுகின்ற வகையிலும், மதுரை மாநகராட்சியின் அத்துணை அடிப்படை தேவைகளையும் முறையாக நிறைவேற்றிடவும், திட்டப் பலன்களை எவ்வித முறைகேட்டிற்கும் இடமின்றி மக்களுக்கு கொண்டுவந்து சேர்த்திடவும், மதுரை மாநகரத்தின் பண்பாடு, எழில் காக்கப்படவும், மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் 72-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் வி.குமார் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க.விடம் ஒப்படையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரமணி, வக்கீல் ராமசாமி, சுப்புராம், முருகேசன், குஞ்சார், ராஜேந்திரன், சேகர், மணிகண்டன், அருண், பூப்பாண்டி, ரமேஷ்பாபு, வெங்கடேஷ், பாண்டியன், சிமிண்ட்கடை சண்முகம், சித்திரைச்செல்வன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட அ.தி.மு.க. முன்னணியினர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் சேகர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.