முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு விவகாரம்: மத்திய படையினரை ஈடுபடுத்த கோர்ட்டில் தமிழகம் மனு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. - 7 - முல்லைப் பெரியாறு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,  கேரளாவில் இருக்கும் சில கட்சியினரால் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வன்முறைகள் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அணைக்கு அருகே உள்ள தமிழகத்தின் மின்வாரிய அலுவலகத்தை 200 பேர் கொண்ட கும்பல் 2 முறை உடைத்திருக்கிறது. சிலர் அப்பகுதியில் அணையை உடைக்க ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் மேலும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை அணை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்