முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஊழல் விவகாரம்ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய-சுப்பிரமணியசாமி

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

கோரக்பூர்,டிச.- 11 - 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விலை நிர்ணயம் செய்ததில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி கோரியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளிக்க சுப்பிரமணியசாமிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி அனுமதி அளித்துள்ளார். இதனையொட்டி ப.சிதம்பரம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன.இந்தநிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு வந்த டாக்டர் சுப்பிரமணிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அலைக்கற்றைக்கு விலை நிர்ணயம் செய்வதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருக்கிறது. அவரும் அப்போது தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும்தான் சேர்ந்து விலை நிர்ணயம் செய்துள்ளனர். அதனால் ப.சிதம்பரம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் அவர்கள் இருவரும் கையெழுத்துப்போட்ட தஸ்தாவேஜூகளை நான் கோர்ட்டில் சமர்ப்பிப்பேன். சிதம்பரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தேவையில்லாமல் தலையிடுகிறார். சிதம்பரத்திற்கு காப்பாற்றும்படி பேசி வருகிறார். சிதம்பரத்தின் மீது கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கபில் சிபல் மறுத்துள்ளார். சோனியா காந்தியின் உத்தரவுப்படி தேசிய ஆலோசனை கவுன்சிலானது வகுப்பு கலவர தடுப்பு மசோதா 2011 ஐ தயார் செய்துள்ளது. இந்த மசோதாவானது நாட்டின் பல பகுதிகளில் பிரிவினையையும் கோஷ்டிகளையும் ஏற்படுத்தும். இந்த மசோதாவானது சிறுபான்மை பிரிவினர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்