LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,மார்ச்.- 13 - கடுமையான விலைவாசி உயர்வு, தி.மு.க.வின் ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இவற்றின் காரணமாக மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என்று தனது கருத்துக் கணிப்பின் மூலம் வெளியிட்டிருக்கிறது இந்திய வாக்காளர் பேரவை. இந்த பேரவை கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் ஒரு அமைப்பு ஆகும்.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த இன்னல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவை ஓராயிரம் என்று சொல்லலாம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இடைவிடாத மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வாட்டி வதைத்தது. உப்பு முதல் உளுந்து வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, செங்கல், சிமிண்ட், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கத் தவறியது இவையெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரேசன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றாலும் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவை தவிர, அன்றாடம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் இவற்றாலும் மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் அடுத்த மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2004 ல் நடந்த தேர்தலில் இந்திய அளவில் ஒரு மெகா சர்வே நடத்தி சோனியா காந்தி தலைமையில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்ற கருத்துக் கணிப்பை இந்த அமைப்புதான் வெளியிட்டது. அதற்கடுத்து 2006 சட்டமன்ற தேர்தலின் போது இழுபறியான சீட்டுக்களை பெற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சிதான் ஏற்படும் என்ற சர்வேயையும் இந்த அமைப்புதான் வெளியிட்டது.
தற்போதும் இந்த அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதி அரசு பற்றி வெளிவந்த விமர்சனங்கள் பலவற்றை கேள்விகளாக தொகுத்து அவற்றுக்கு மக்களிடம் பதில்களை இந்த அமைப்பு பெற்றுள்ளது. முதல் கேள்வியாக, தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சி நல்லாட்சி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வெறும் 5 சதவீதம் பேர் ஆம் என்றும் 95 சதவீதம் பேர் இல்லை என்றும் பதிலளித்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தினரின் கையில் ஆட்சி இருப்பதை விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று 90 சதவீதம் பேரும், ஆமாம் என்று 10 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவது, கடத்தல் வியாபாரிகளுக்குத்தான் அதிக பயனுள்ளதாக மக்கள் கருதுகிறார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 80 சதவீதம் பேரும், இல்லை என்று 20 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியே வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 98 சதவீதம் பேர் இல்லை என்றே கருத்து கூறியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 25 கேள்விகளில் 22 கேள்விகளுக்கு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களையே 93.40 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று மக்கள் நினைக்கிறார்களா? தி.மு.க. ஆட்சி கூடாது என்று விரும்புவோர் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கும் ஆம் என்றே 100 க்கு நூறு சதவீதம் பேர் தங்கள் பதிலை டிக் அடித்திருக்கிறார்கள். இவர்களது சர்வேயின்படி கடுமையான விலைவாசி உயர்வு, ஆ. ராசா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு, கருணாநிதி குடும்பத்தின் அதிகார ஆதிக்கம் ஆகியவை தமிழக மக்களிடம் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது.
இலவச கலர் டி.வி பற்றி கேட்ட போது, கேபிள் இணைப்பை இலவசமாக கொடுக்கவில்லையே என்று மக்கள் கிண்டலாக பதிலளித்தார்களாம். இந்த முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்களே... என்று கேட்ட போது கொடுக்கட்டும், யார் வீட்டு பணம். எங்கள் பணம்தானே. பணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிப் போடுவோம் என்று மக்கள் பதிலளித்தார்களாம். மக்களின் இந்த பதில் மூலம் ஆய்வு செய்த போது 234 தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் கைப்பற்றும் என்று தெரிகிறது என இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த சர்வே கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
-
முல்லை பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்யும் : பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
09 Aug 2022சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
-
2022-காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி சாதித்தது என்ன?
09 Aug 2022இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
-
அக்னி பாதை திட்டம்: ராணுவ காவல்துறையில் சேர தமிழக இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
09 Aug 2022அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
-
உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா
09 Aug 2022வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
-
பீகாரில் ஜே.டி.யு. - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்
09 Aug 2022பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
-
துவரிமான் ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
09 Aug 2022மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
-
ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் 18 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
09 Aug 2022புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
-
செல்பி மோகத்தால் ஏற்பட்ட பயங்கரம்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
09 Aug 2022திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
-
காமன்வெல்த் போட்டி: பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Aug 2022சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
50 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
09 Aug 2022தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
குஜாராத்தில் 10 பேருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க வாழ்நாள் தடை
09 Aug 2022காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மாயத்தேவர் மறைவு: ஓ.பி.எஸ். இரங்கல்
09 Aug 2022சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
44-வது செஸ் ஒலிம்பியாட் 2022: வெண்கலம் வென்றது இந்திய மகளிர் ‘ஏ’ மற்றும் ‘பி’ அணி
09 Aug 2022மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
-
செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
-
பாக். டிடிபி அமைப்பின் தளபதி கண்ணிவெடி தாக்குதலில் பலி
09 Aug 2022கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
-
சாலை விபத்தில் பலியான பிரபல கிரிக்கெட் நடுவர்
09 Aug 2022தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
-
அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடருமா ? தமிழக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
09 Aug 2022நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
-
ஒமைக்ரான் தொற்றுக்காக புதிய தடுப்பூசி: ஜப்பான் அரசு ஒப்புதல்
09 Aug 2022டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி : ஹர்திக் பாண்ட்யா பேட்டி
09 Aug 2022லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி
09 Aug 2022186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
-
சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் : கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
09 Aug 2022சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ஸ் இசைத்த முதல்வர் ஸ்டாலின்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: கேமரூனில் ராணுவ வீரர் உள்ளிட்ட 5 பேர் பலி
09 Aug 2022கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
-
எப்.பி.ஐ. அதிகாரிகள் டிரம்பின் எஸ்டேட்டில் திடீர் சோதனை : இது இருண்ட காலம் என விமர்சனம்
09 Aug 2022புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
-
மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் திறப்பு : கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
09 Aug 2022சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.