எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,டிச.- 25 - உத்திரப்பிரதேசம்,பஞ்சாப்,உத்தரகாண்டம், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்துள்ளார். நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர்,கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் முடியும் தருவாயில் உள்ளது. அந்த மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் புதிய சட்டசபை தொடங்க வேண்டும். அதனையொட்டி அந்த 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து நேற்றுமுன்தினம் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்குடன் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பாதுகாப்புக்காக 80 ஆயிரம் மத்திய போலீஸ் படையை அனுப்ப தயார் என்று உள்துறை செயலாளர் சிங் தெரிவித்தார். உத்திரப்பிரதேச மாநிலம் பெரிய மாநிலமாக இருப்பதால் கடந்தாண்டு மாதிரி 7 கட்டமாக தேர்தல் நடத்துவதா அல்லது 8 கட்டமாக தேர்தல் நடத்துவதா என்பது குறித்தும் பிப்ரவரியில் தேர்தல் நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்குமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மணிப்பூர் மாநிலம் சிறிய மாநிலமாக இருந்தாலும் அங்கு நக்சலைட்கள், தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதேசமயத்தில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தல்களின்போது வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடக்கவில்லை.இந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதியை அறிவித்தார். இந்த 5 மாநிலங்களிலும் வருகின்ற ஜனவரி 28-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தேர்தல் நடக்கும் என்றும் குரேஷி அறிவித்தார். உத்திரப்பிரதேச மாநிலம் நாட்டிலேயே பெரிய மாநிலமாகும். அங்கு சட்டசபையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் கடந்த தேர்தலின்போது தேர்தல் நடத்தியது போல் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 7-வது கட்ட தேர்தல் பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேசமயத்தில் உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களிலும் ஒரே கட்ட தேர்தல் நடக்கும் என்றும் குரேஷி அறிவித்துள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4,8,11,15,19,23,28 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும். அதன் அண்டை மாநிலமான உத்தரகாண்ட சட்டசபைக்கு ஜனவரி 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். உத்தரகாண்ட் சட்டசபை 70 தொகுதிகளை உள்ளடக்கியதாகும். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும் ஜனவரி 30-ம் தேதியே ஒரு கட்ட தேர்தல் நடக்கும். 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு ஜனவரி 28-ம் தேதியும் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3-ம் தேதியும் நடக்கும் என்று குரேஷி மேலும் கூறினார். இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நேற்று முதலே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும். அதனால் தேர்தலை மார்ச் 3-வது வாரத்தில் நடத்தலாம் என்று முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் இதை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
முருங்கை சாறு, பாதாம் அல்வா: இந்திய ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புதினுக்கு சிறப்பு விருந்து
06 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்து மெனு கார்டு வைரலாகியுள்ளது. அதில், தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு’ முதலிடம் பிடித்துள்ளது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்: 19-ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டால
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
06 Dec 2025சென்னை, அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடியவர்: அம்பேத்கருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
06 Dec 2025சென்னை, அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
1,609.69 கோடி ரூபாய் மதிப்பிலான பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
06 Dec 2025சென்னை, மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்க ரூ.1,609.69 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை இன்று உத்தங்குடியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க
-
இண்டிகோ நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: விமான போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் மோகன் நாயுடு குறினார்.


