எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, பிப். 21 - பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இறுதிக் கெடு விதித்திருந்தது. இதையடுத்து இத்தனை காலம் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாமல் சுணக்கம் காட்டி வந்த மத்திய அரசு, தற்போது சுப்ரீம் கோர்ட்டின் கெடுவுக்கு பணிந்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெடு முடிவதற்கு முதல் நாள் அதாவது நேற்று முன்தினமே கெஜட்டில்(அரசிதழில்) வெளியிட்டு விட்டது. எனவே இனிமேல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்கவே முடியாது. அப்படி ஒரு உத்தரவாதம் தமிழகத்திற்கு கிடைத்து விட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டு விட்டதால் தமிழக மக்களும், டெல்டா விவசாயிகளும், அ.தி.மு.க.வினரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறார்கள். இது தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதாவும் கூறி உள்ளார். இப்போதுதான் தனக்கு மன நிறைவாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றியை அ.தி.மு.க. வினரும், விவசாயிகளும் பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 6 வருடங்களாகி விட்டன. ஆனால் இந்த தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில்(அரசிதழில்) வெளியிடாமலேயே இருந்து வந்தது. இதற்கு முன்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் கெஜட்டில் வெளியிடாமல் மத்திய அரசு சுணக்கம் காட்டியது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு கெஜட்டில் வெளியானது. இறுதித் தீர்ப்பை மத்திய அரசு வெளியிடாமலேயே இருந்து வந்தது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதங்கள் எழுதினார்.
இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி உட்பட வேறு எவரும் காவிரி விவகாரத்தில் இந்தளவிற்கு அக்கறை காட்டியதில்லை. மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்ததும் இல்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா மட்டும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளிவர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்காததால் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி 4 ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தாமதம் செய்வதா? என்று மன்மோகன்சிங் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது மத்திய அரசின் கடமை. தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அதை இன்னமும் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கர்நாடக அரசுதான் எதிர்க்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து கர்நாடகத்திற்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு கால அவகாசம் கோரியது. ஆனால் இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாக வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டனர். இதனால் மத்திய அரசு ஆடிப்போனது. ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு சுணக்கம் காட்டி வந்தது.
ஆனால் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்ததால் மத்திய அரசுக்கு வேறு வழி தெரியாமல் போனது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் ஷெட்டர், டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று மன்றாடினார். கர்நாடகத்தை சேர்ந்த சித்தராமய்யா, அனந்தகுமார், ரேவண்ணா, பசவராஜ் போன்ற சர்வ கட்சித் தலைவர்களும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று வற்புறுத்தினார்களாம். ஆனால் மத்திய அரசு நேற்று முன்தினம் ஒரு முடிவுக்கு வந்தது. காரணம், சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்ததால் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நேற்று முன்தினமே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது. இவ்வாறு இறுதித் தீர்ப்பு வெளியாகி இருப்பது கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் பின்னடைவாகும். தமிழகத்திற்கு இதன் மூலம் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், டெல்டா விவசாயிகளுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனது 30 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் தான் செய்த மகத்தான சாதனையாக தான் இதை கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றுதான் தனக்கு மனநிறைவு கிடைத்திருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நடுவர் மன்ற தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி இருப்பதால் இனி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்க முடியாது. மறுக்கவும் வழியில்லை. அப்படிப்பட்ட ஒரு உத்தரவாதம் தமிழக அரசுக்கும், டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்துள்ளது.
இனி டெல்டா விவசாயிகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கு இந்த விஷயத்தில் நீதி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி விட்டதால் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்படும். அல்லது காலாவதியாகி விடும். புதிதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். எனவே இனிமேல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தியே ஆக வேண்டும். அதன்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எனவே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியானதால் தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், அ.தி.மு.க.வினர் என பலதரப்பட்ட மக்களும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு...
கர்நாடகத்தின் எதிர்ப்புகளையும் மீறி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. எனவே இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூற முடியாது. தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் தந்தே தீர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சட்ட பாதுகாப்பு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007 ம் ஆண்டில் வெளியிட்டது. அதாவது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையின் நகல் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கும் அரசாணையின் நகலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவிற்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் அளிக்கப்பட வேண்டும். இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டதால் நதிநீர் பங்கீடுகள் தானாகவே சட்ட நடைமுறைக்கு வந்து விடும். இந்த தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.
90 நாட்களுக்குள் அமலுக்கு வரும்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையிலேயே கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மறுக்க முடியாது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தற்போது தண்ணீர் கொடுத்து வந்த கர்நாடகம், பல சமயங்களில் அதையும் கூட கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்தது.
ஆனால் இனி அப்படி நடக்காது. நடக்கவும் முடியாது. அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலையிலேயே இந்த அறிவிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஒப்புதல் அளித்து விட்டார். பிரதமரின் அனுமதியை தொடர்ந்து அவர் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் அந்த அறிவிக்கையை நேற்று முன்தினம் மாலைக்கு மேல் அரசு வெளியிட்டது. இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நதிநீர் ஆணையம், கண்காணிப்பு குழு ஆகியவை ரத்தாகி விடும். அதற்குப் பதிலாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இனி, இவைதான் நதிநீர் பங்கீட்டை கண்காணித்து அமல்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக