எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.21 – சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 9 பேர் இல்ல திருமணங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று நடத்தி வைத்தார்.
அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் அய்யப்ப ராஜ்–அருணாஸ்ரீ, திருநெல்வேலி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முருகையா பாண்டியன் மகன் வெங்கட்ராமன்–சுபிதா, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு மகன் பாலாஜி–பிரியங்கா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் மகள் டாக்டர் காயத்ரி–டாக்டர் கிருஷ்ணபாரத் ஆகியோரின் திருமணத்தை முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று நடத்தி வைத்தார்.
திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன்– மோனிகா, சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் உமாதேவன் மகன் முத்துக்குமரன்– சேதுக்கரசி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளர் வெங்கடேஷ்வரன்– சுவாதினி, விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சேகர் மகன் ஜெயப்பிரகாஷ்– ராஜேஸ்வரி. மதுராந்தகம், நகர்மன்ற 5வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் மகள் பகவதி– ராஜ்மோகன் ஆகியோரின் திருமணத்தையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த திருமணங்கள் நடந்தது.
இங்கு பிரமாண்ட மேடை, பந்தல் போடப்பட்டிருந்தது. ஒரே மேடையில் அண்ணா தி.மு.க. குடும்ப திருமணங்களை முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா 10–55 மணிக்கு மேடைக்கு வந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்களும், மண வீட்டாரும் ‘‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க’’ என்று வாழ்த்து கோஷங்களை உற்சாகத்துடன் எழுப்பினார்கள்.
மேடைக்கு வந்த முதலமைச்சர் அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து கை கூப்பி வணங்கியும், கை அசைத்தும் அவர்களது உற்சாக வரவேற்பை பெற்றுக் கொண்டார்.பின்னர் 9 ஜோடி திருமணங்களையும் முதலமைச்சர் நடத்தி வைத்தார்.
ஒவ்வொரு திருமணமாக ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
முதலில் மணமகன் கையில் மங்கநாணை எடுத்து கொடுத்து மணமகள் கழுத்தில் அணிவிக்க சொன்னார். பின்னர் மணமகன் கையில் மாலை எடுத்து கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார். பின்னர் மணமக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அட்சதை தூவி மணமக்களை முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தினார். பின்னர் மணமக்களுக்கு பரிசு வழங்கினார்.
முதலமைச்சருடன் மணமக்களும், பெற்றோரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
9 ஜோடி திருமணங்களையும் நடத்திய பின்னர் 9 ஜோடிகளும் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மங்களகரமான இந்த நன்னாளில் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த, ஒன்பது ஜோடி மணமக்களுக்குத் திருமணம் நடத்தி வைத்ததிலும்; உங்களை எல்லாம் சந்தித்து உங்களிடையே உரையாடுவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தீர்த்தங்கள் ஒன்பது! தானியங்கள் ஒன்பது! ரசங்கள் ஒன்பது! கிரகங்கள் ஒன்பது! ரத்தினங்கள் ஒன்பது! உலோகங்கள் ஒன்பது! வீரர்கள் ஒன்பது! அடியார்களின் பண்புகள் ஒன்பது! அபிஷேகங்கள் ஒன்பது! என்பது போல், இன்று நடத்தி வைக்கப்பட்டுள்ள திருமணங்களின் எண்ணிக்கையும் ஒன்பது !
இன்றைய தினம் முதலாவதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், அன்புச் சகோதரர் பி. செந்தூர் பாண்டியன்– – சண்முகதுரைச்சி தம்பதியினரின் மகன் சி. ஐயப்பராஜூக்கும்;
சுப்பையா –கனகா தம்பதியினரின் மகள், எஸ். அருணாஸ்ரீக்கும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
ஆரம்ப கால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் செந்தூர் பாண்டியன், தூய தொண்டர். கழகத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். செங்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளராகவும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பல்வேறு அரசுப் பதவிகளையும் வகித்த பெருமை இவருக்கு உண்டு. தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
அடுத்ததாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான, அன்புச் சகோதரர் ஆர். முருகையா பாண்டியன் – –லெட்சுமி தம்பதியினரின் மகனும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான, ஆர்.எம்.வெங்கட்ராமனுக்கும்; ராஜகோபால்–பார்வதி தம்பதியினரின் மகள் ஆர். சுபிதாவுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
ஆரம்ப கால விசுவாசியும், தொடக்கம் முதல் ஒரே தலைமையின் கீழ் பணியாற்றி வருபவருமான, அன்புச் சகோதரர் முருகையா பாண்டியன், திருநெல்வேலி மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என படிப்படியாக உயர்ந்து தற்போது திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இது மட்டுமல்லாமல், பல்வேறு அரசுப் பதவிகளை வகித்த அனுபவமும் இவருக்கு உண்டு. எனது நம்பிக்கைக்கு உரியவர்.
மூன்றாவதாக, ஆரம்ப கால விசுவாசியும், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவரும், சென்னை மாநகராட்சி 98-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் தாடி ம. ராசு– காஞ்சனா தம்பதியினரின் மகன் எம்.ஆர். பாலாஜிக்கும்; அண்ணாதுரை– நாகம்மாள் தம்பதியினரின் மகள் ஏ.பிரியங்காவுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
அன்புச் சகோதரர் தாடி ம. ராசு, அண்ணா தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தற்போது அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக திறம்பட பணியாற்றி வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரன் -– சந்திரா தம்பதியினரின் மகள் காயத்ரிக்கும்; சந்தணப் பாண்டியன் – காசி ராஜாத்தி தம்பதியினரின் மகன் எஸ். கிருஷ்ண பாரத்துக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.நயினார் நாகேந்திரன் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறார். தற்போது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார்.
தொடர்ச்சியாக, திருவொற்றியூர் நகரக் கழகச் செயலாளரும், திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் கே. குப்பன் -– திலகவதி தம்பதியினரின் மகன், கே. மோகனுக்கும்; ராபர்ட்– பாத்திமா தம்பதியினரின் மகள் மோனிகாவுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த, குப்பன், தற்போது திருவொற்றியூர் நகரக் கழகச் செயலாளராக இருந்து வருகிறார்.
ஆறாவதாக, சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர், கூட்டுறவு இணையத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் கே.கே.உமாதேவன் - முத்துலட்சுமி தம்பதியினரின் மகன் திருவளர்செல்வன் கே.கே.யு.முத்துக்குமரனுக்கும்; ரவி– சாந்தி தம்பதியினரின் மகள் சேதுக்கரசிக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
உமாதேவன் ஆரம்ப கால கட்சிக்காரர். கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை, வகித்துள்ளதோடு, சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.
ஏழாவதாக, தெய்வத்திரு அழகர்சாமி நாயுடு– முத்துலட்சுமி தம்பதியினரின் மகனும், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கழகச் செயலாளருமான அன்புச் சகோதரர்
ஏ.எல். வெங்கடேஷ்வரனுக்கும்; வி.பி. லெட்சுமணன்– வள்ளி தம்பதியினரின் மகள் எல்,சுவாதினிக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
எட்டாவதாக, எனது பெயரில் செயல்பட்டு வரும் பேரவையின் விழுப்புரம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர், அன்புச் சகோதரர் திண்டிவனம் கே. சேகர்– மல்லிகா தம்பதியினரின் மகனும் விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும்; துடிப்புமிக்க இளைஞருமான கே.எஸ். ஜெயபிரகாசுக்கும்; ரவி –பாக்கியலட்சுமி தம்பதியினரின் மகள், ராஜேஸ்வரிக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
நிறைவாக, ஆரம்ப கால விசுவாசியும், மதுராந்தகம் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதியும், நகர மன்ற 5-வது வார்டு உறுப்பினருமான, அன்புச் சகோதரர் ஈ. கிருஷ்ணன்– இந்திரா தம்பதியினரின் மகள் கே.பகவதிக்கும்; மனோகர் தெய்வத்திரு வள்ளி தம்பதியினரின் மகன் ராஜ்மோகனுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.
இவர்களது திருமணங்களை நடத்தி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ள மணமக்கள், கரும்பைப் போல இனிப்பாய், காற்றைப் போல சுகமாய், இயற்கையைப் போல ரம்யமாய், ஊர் போற்றும் அளவுக்கு, வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான முருகையா பாண்டியன் வரவேற்றார்.
அமைச்சர் பி.செந்தூர்பாண்டியன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, திருவொற்றியூர் நகர கழக செயலாளரும் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.குப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார். மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் நூர்ஜகான் ரசாக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
திருமண விழாவுக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வீட்டிலிருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை வழிநெடுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆங்காங்கே செண்டை மேளம், பேண்டு வாத்தியம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லாம் தலைமையில் ஏராளமான பஸ் தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்க கொடிகளுடன் வந்து உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
நுழைவு வாயிலில் பெண்கள் சீருடையுடன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார்கள்.சாலையில் இருபக்கமும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக கூடியிருந்து வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றார்கள்.
விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் இ.மதுசூதனன், ஈ.வி.கே.சுலோசனா சம்பத், பி.எச்.பாண்டியன், பொன்னையன், ஆதிராஜாராம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும் வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் கள் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயகுமார், சி.வி.சண்முகம், என்.ஆர்.சிவபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.செந்தமிழன், கே.பி.கந்தன், ராஜபாளையம் கோபால்சாமி, கடம்பூர் ராஜு, எம்.கே.அசோக், எம்.பி.க்கள் டாக்டர் வேணுகோபால், நவனீதகிருஷ்ணன், பி.குமார், டாக்டர் மைத்ரேயன், எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெயவர்த்தன், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, சசிகலா புஷ்பா, மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., நா.பாலகங்கா, விருகை ரவி மற்றும் பரிமேலழகர், வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் சரஸ்வதி ரங்கசாமி, வேளாங்கண்ணி, அஞ்சுலட்சுமி, திருச்சி மாவட்ட பேரவை செயலாளர் சீனிவாசன், நடிகர் ஜெயகோவிந்தன், மயிலை ராஜேஷ் கண்ணா, பகுதி செயலாளர்கள் நுங்கை மாறன், வி.கே.பாபு, கவுன்சிலர்கள் பி.சின்னையன், டி.சிவராஜ் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.