முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்னா - வாராணாசி இடையே சொகுசுக் கப்பல் போக்குவரத்து

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

கௌஹாட்டி, செப்.02 - பிகார் தலைநகர் பாட்னாவில் இருந்து உத்திரப்பிரதேச மாநிலம் வாராணாசிக்கு கங்கை நதி வழியே எம் வி ராஜ்மஹால் என்ற சொகுசுக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலை அஸ்ஸாம் மாநில அரசின் அஸ்ஸாம் - பெங்கால் கப்பல் போக்குவரத்து நிருவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிராவாக இயக்குநர் ஆசிஷ் பூக்கான் கூறியதாவது: இந்தியா, வெளிநணாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பாட்னாவில் இருந்து கங்கை நதியில் 420 கி.மீ. தூரத்தை 7 நாள்கள் பயணித்து இந்தக் கப்பல் கடந்த வாரம் வாராணாசியை அடைந்தது.

55 மீட்டர் நீளம் உடைய இந்தக் கப்பலில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 அறைகள் உள்ளன. இந்தக் கப்பலுக்கு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது என்று ஆசிஷ் பூக்கான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்