எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.புதிய கட்சியின் தொடக்க விழா மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.ஜி.கே.வாசன் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த கட்சிப் பெயரை டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் கடந்த வாரம் வாசன் ஆதரவாளர்கள் கொடுத்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில மக்கள் காங்கிரஸ், தமிழ் மாநில மறுமலர்ச்சி காங்கிரஸ் என்று மூன்று பெயர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பெயரை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்வு செய்து கொடுக்க உள்ளனர். அந்த பெயரை வாசன் திருச்சி மாநாட்டில் வெளியிடுவார்.புதிய கட்சியின் கொடியையும் மாநாட்டில் அறிமுகம் செய்ய வாசன் முடிவு செய்திருந்தார். ஆனால் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் புதிய கட்சி கொடியை ஏந்தி வர வேண்டும் என்று பலரும் வாசனிடம் தெரிவித்தனர். அதை ஏற்று புதிய கொடி சென்னையில் 26–ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என்று வாசன் அறிவித்திருந்தார்.அதன்படி வாசன் கட்சியின் புதிய கொடி அறிமுக விழா இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சாந்தோம் சர்ச் எதிரில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் புடை சூழ புதிய கொடியை ஜி.கே.வாசன் அறிமுகம் செய்தார்.
புதிய கொடி ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களைக் கொண்டுள்ளது. கட்சி மத்தியில் காமராஜர், மூப்பனார் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.புதிய கொடியை உயர்த்திப் பிடித்து வாசன் காண்பித்தார். பிறகு அவர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.கட்சியின் கொடி அறிமுக விழாவில் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
எங்களது புதிய இயக்கத்தின் கொடியை மிகவும் மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த கொடி மூவர்ணக் கொடியாகும்.
மேலே ஆரஞ்சு நிறம், நடுவில் வெள்ளை, கீழே பச்சை ஆகிய 3 நிறங்களும் கொண்டதாக இந்த கொடி இருக்கும். இதில் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் திரு உருவப் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதுவே புதிய இயக்கத்தின் கொடி ஆகும். இது வலிமையான பாரதம், வளமான தமிழகம் என்பதை உணர்த்தும் வகையில் தேர்ந்து எடுத்துள்ளோம்.இந்த கொடியில் இடம் பெற்றுள்ள ஆரஞ்சு நிறம் தியாகத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. பச்சை நிறம் பசுமை மற்றும் வளமையை குறிக்கிறது.இந்த மூவர்ணக் கொடி தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்கள் முதல் மாநகர்கள் வரை பட்டொளி வீசி பறக்கட்டும். வட்டார, நகரங்களில் வீடு, வீடாக வீதி, வீதியாக தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்த புதிய கொடியை ஏந்தி சென்று மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், திருச்சியில் நடைபெறும் திருப்புமுனை மாநாட்டுக்கு 28–ந் தேதி அலைகடலென வருகிறார்கள். நமது புதிய இயக்க கொடியை ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தில் பொருத்தி வர வேண்டும்.
புதிய கொடியை தொண்டர்கள் கையில் ஏந்தி எழுச்சியுடன் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். புதிய கட்சியின் பெயர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் சட்டத்துக்குட்பட்டு, கோட்பாடுகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய கட்சி பெயரை 28–ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.இப்போது இயக்கத்தின் மூத்த தலைவர்கள் புதிய கொடியை லட்சோப லட்ச மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். நாளை மறுநாள் (நாளை) மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை அனைவரும் கவனித்து வருவதால், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னணி நிர்வாகிகள் புதிய கொடி பற்றி வாழ்த்தி பேசினார்கள்.நிகழ்ச்சியில் ஞானதேசிகன், ரெங்கசாமி மூப்பனார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் என்ற வேணுகோபால், முக்தா சீனிவாசன், சைதை ரவி கோவிந்தசாமி, ரவி பாரதி, ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன்.இ.சி.சேகர், முனைவர் பாட்சா, பிஜுசாக்கோ, கத்திப்பாரா ஜனார்த்தனன், விக்டரி மோகன், விக்டரி ஜெயக்குமார், ஜி.ஆர்.கதிரவன், அடையார் எம்.ராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி, ஆனந்தராஜ், பிரசாத், அசோக், விஜயன், ஆர்.எஸ்.முத்து, கஜநாதன், ஐ.டி.அரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ