முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 82 லட்சம்

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 2ம் தேதி துவாதசி விழா நடக்கிறது. அன்றைய தினம் பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுவதற்காக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்வது தொடங்கியது. மொத்தம் 10 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட்டில் தரிசன நேர விவரம் அறிவிக்கப்படும். அத்துடன் 1,2ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த 300 ரூபாய் டிக்கெட்டும், 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டும் ரத்து செய்யப்படுகின்றன. புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோவிலி்ல் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின்  குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அனுமதி கிடைக்கவில்லை என்றால் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம். இல்லையெனில் அடையாள அட்டையை காண்பித்து ஏழுமலையான் கோவில் துணை கோவில்களுக்கு சென்று வழிபடலாம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானமாக ரூ. 2 கோடியே 82 லட்சம் கிடைத்தது. இவ்வாறு தேவஸ்தானம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூ றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து