எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகார் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நேற்று (ஆக.10) செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் உள்ள இரண்டு வாக்காளர் அட்டையை அவர் காண்பித்தார். அதில் விஜய் குமார் சின்ஹாவுக்கு பாட்னாவில் உள்ள பங்கிபூர் மற்றும் லக்கிஸராய் தொகுதியில் வாக்காளர் அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். இது தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு வெளியான வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
“தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் வரைவு பட்டியலில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் பெயர் இரண்டு இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியே போலியானது என நாங்கள் சொல்லி வருகிறோம். துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை இடம்பெற்றது எப்படி? சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் நிலை அதிகாரி அவரிடம் கையொப்பம் வாங்கினாரா? இதில் யார் மீது தவறு உள்ளது?
இந்த விவகாரத்தில் விஜய் குமார் சின்ஹா மீது தவறு இருந்தால் அவர் பதவி விலக வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பக்கம் தவறு இருந்தால் மாநில தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு உதவும் கருவியாக தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது. எனக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவுக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுக்குமா?” என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


