எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் ரோசய்யா - தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரோசய்யா:– கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாக திருநாளான இந்த பண்டிகை சகோதரத்துவம், நல்லிணக்கத்தை மேம்படுத்தட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:– தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.‘இஸ்லாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இஸ்லாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும்.இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன் பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–தியாகத் திருநாள் என்று கூறப்படும் பக்ரீத் பண்டிகையை, இஸ்லாமிய சமுதாய மக்கள் குர்பானி வழங்கி கொண்டாடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழுகின்ற, சமதர்ம நெறியை போற்றும் வகையில் குர்பானி வழங்கி கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்:– இந்த வருடம் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் முதல் பிறை தெரிந்ததால் வருகின்ற 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.ஏழை, எளிய மக்களுக்கு உதவுகின்ற இந்த தியாகத் திருநாளில் நாம் “நமது இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது அன்பு பாராட்டுவோம்; அவர்களுக்கு அரணாக இருப்போம்; அவர்களையும் அரவணைத்து இந்தியாவை வளமும், வலுவும் உள்ள நாடாக உருவாக்குவோம்’’ என சபதம் ஏற்போம்.இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:– ‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வரும் ம.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:– உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ‘‘தியாகத்திருநாள்’’ என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகையாகும்.இந்த இனிய திருநாள் உலகெங்கும் எந்நாளும் சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாகவும், சமத்துவமும் சமாதானமும் நிலைத்திருக்கும் விதமாகவும், அனைத்து இதயங்களிலும் அன்பைப் பரிமாறும் நன்னாளாகப் பரிணமிக்கட்டும்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:– இப்ராஹிம் நபி இறைவன் ஒருவனே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தம்முடைய மார்க்கத்தின் செய்தியாக அளித்தவர். அவரின் இறைபக்தி எல்லையிலாது, ஈடில்லாதது. தம்முடைய மகனான இஸ்மாயிலை அவனுடைய முழு சம்மதத்துடன் இறைவனுக்கு காணிக்கையாக்க முனைந்த தியாக செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளே ஹஜ் பெருநாள் என்னும் பக்ரீத் பெருநாளாகும்.இந்த புனித திருநாளாம் பக்ரீத் நந்நாளில், நாட்டு மக்கள் அனைவரும் மதவேற்றுமைகளை கடந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் நாட்டினை எதிர் நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க சூளுரை மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் வருமாறு:– அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகி தலைவர் டாக்டர் சேதுராமன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இளையத்துல்லா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருப்பரங்குன்றம் வழக்கு: ராம ரவிக்குமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
08 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
08 Jan 2026சென்னை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
08 Jan 2026திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.


