எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் ரோசய்யா - தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரோசய்யா:– கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாக திருநாளான இந்த பண்டிகை சகோதரத்துவம், நல்லிணக்கத்தை மேம்படுத்தட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:– தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.‘இஸ்லாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இஸ்லாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும்.இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன் பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–தியாகத் திருநாள் என்று கூறப்படும் பக்ரீத் பண்டிகையை, இஸ்லாமிய சமுதாய மக்கள் குர்பானி வழங்கி கொண்டாடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழுகின்ற, சமதர்ம நெறியை போற்றும் வகையில் குர்பானி வழங்கி கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்:– இந்த வருடம் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் முதல் பிறை தெரிந்ததால் வருகின்ற 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.ஏழை, எளிய மக்களுக்கு உதவுகின்ற இந்த தியாகத் திருநாளில் நாம் “நமது இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது அன்பு பாராட்டுவோம்; அவர்களுக்கு அரணாக இருப்போம்; அவர்களையும் அரவணைத்து இந்தியாவை வளமும், வலுவும் உள்ள நாடாக உருவாக்குவோம்’’ என சபதம் ஏற்போம்.இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:– ‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வரும் ம.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:– உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ‘‘தியாகத்திருநாள்’’ என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகையாகும்.இந்த இனிய திருநாள் உலகெங்கும் எந்நாளும் சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாகவும், சமத்துவமும் சமாதானமும் நிலைத்திருக்கும் விதமாகவும், அனைத்து இதயங்களிலும் அன்பைப் பரிமாறும் நன்னாளாகப் பரிணமிக்கட்டும்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:– இப்ராஹிம் நபி இறைவன் ஒருவனே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தம்முடைய மார்க்கத்தின் செய்தியாக அளித்தவர். அவரின் இறைபக்தி எல்லையிலாது, ஈடில்லாதது. தம்முடைய மகனான இஸ்மாயிலை அவனுடைய முழு சம்மதத்துடன் இறைவனுக்கு காணிக்கையாக்க முனைந்த தியாக செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளே ஹஜ் பெருநாள் என்னும் பக்ரீத் பெருநாளாகும்.இந்த புனித திருநாளாம் பக்ரீத் நந்நாளில், நாட்டு மக்கள் அனைவரும் மதவேற்றுமைகளை கடந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் நாட்டினை எதிர் நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க சூளுரை மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் வருமாறு:– அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகி தலைவர் டாக்டர் சேதுராமன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இளையத்துல்லா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
14 Jul 2025சென்னை : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது மு
-
இங்கிலாந்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
14 Jul 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
-
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா பதிலளிக்க உத்தரவு
14 Jul 2025சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
14 Jul 2025சென்னை : தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என்று நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் 3 மாவட்ட தி.மு.க.
-
மதுரையில் செப். 4-ந் தேதி மாநாடு: ஓ.பி.எஸ். தகவல்
14 Jul 2025சென்னை : மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ
-
நடிகை சரோஜா தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Jul 2025சென்னை : தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன்கள்
14 Jul 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
14 Jul 2025சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
-
தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல புதிய செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
14 Jul 2025சென்னை : தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், ப
-
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
-
விருந்து நிகழ்ச்சியில் சாம்பியன்கள்
14 Jul 2025கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
14 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர்...