முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

தைவான் : தைவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 121 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  தைவானின் தெற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4 ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது. இதில் தைனான் உட்பட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அப்பளம் போல நொறுங்கின.

முதல் நாளில் 14 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்தது. அங்கு கட்டிட இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்திருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 90 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 121 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தைனான் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்