முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மில்லர் நீக்கம்: புதிய கேப்டனாக முரளி விஜய் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2016      விளையாட்டு
Image Unavailable

டெல்லி :  ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் மில்லர் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக தமிழக வீரர் முரளி விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9-வது ஐபிஎல் சீசனில் டேவிட் மில்லர் தலைமையில் களமிறங்கியிருக்கும் பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியபோதிலும், ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது. இதனை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் மில்லர் நீக்கப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டுக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக சில மாதங்களுக்கு முன்பு டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் இயங்கிய பஞ்சாப் அணி சொல்லிக் கொள்ளும் அளவில் விளையாட வில்லை. அந்த அணியின் பேட்டிங்கும் மிக மோசமாக இருந்ததால் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி மில்லர் 76 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்துள்ள பஞ்சாப் அணி நிர்வாகம் கேப்டனை மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டகாரர் முரளி விஜய் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்