முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்ததற்கு நன்றி : ஹரிஷ் ராவத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஹரித்துவாரில் போற்றுதலுக்குரிய தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்த உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறேன்  என முதல்வர் ஜெயலலிதா, உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., தமிழகத்தின் ஒப்பற்ற புலவர் திருவள்ளுவர் சிலையை ஹரித்துவாரில் நிறுவுவதற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தமிழகத்தில்  கவலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நான் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினேன். உணர்வுப்பூர்வமான இவ்விஷயம் குறித்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு, தாங்கள் உடனடியாகவும், வேகமாகவும் பதிலளித்துள்ளதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். திருவள்ளுவர் சிலையை ஹரித்துவாரில் உள்ள மேலபவனில்  நிறுவ தாங்கள் ஏற்பாடு செய்துள்ளது குறித்து  நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தமிழக மக்களின் சார்பில்  நீங்கள் மேற்கொண்ட சாதகமான, நேர்த்தியான நடவடிக்கைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்