எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குழந்தைகள்தான் வீட்டின் சிறந்த செல்வமாகும். எத்தனை செல்வம் இருப்பினும் குழந்தைச் செல்வம் இல்லை எனில் அனைத்தும் வீண். குழந்தைகள் ஒவ்வொரு வீட்டின் வெளிச்சமாகும். நம் சந்தோசம் எல்லாம் குழந்தைகள்தான் என்றால் மிகையில்லை. அக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். குழந்தைகள் வளர்ப்பிலும், நலத்திலும் தாத்தா-பாட்டி உடனிருந்தனர். அவர்களின் பராமரிப்பில் குழந்தைகள் நலமுடன் இருந்தனர். தற்போதைய சூழலில் தனிக்குடித்தனம், மற்றும் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் குழந்தைகள் நலம் என்பது சற்று கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது.
குழந்தைகள் நலனில் 3 ஆண்டுகள் என்பது மிக முக்கியமாக உள்ள ஆண்டாகும். சிறப்பு கவனம் அவசியமாகும். தடுப்பூசிகள் போடுவதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு, சிறு நோய்களுக்காக கவனம் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படாமல் இருக்க தாய்மார்கள் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
குழந்தைகள் இருக்கும் அறை அவர்கள் பயன்படுத்தும் துணிகள் ஆகியவை சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க தாணியக் கஞ்சி, காய்கறி சாதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு அதாவது வேண்டா குழந்தைகளுக்கு வெல்லம் கொடு என்பார்கள். வெல்லத்துடன் பொட்டுக்கடலை, வேர்கடலை சேர்த்து உருண்டை செய்து தரலாம் இது ரத்த சோகையை நீக்க வல்லது.
பணத்தின் முக்கியத்துவத்தை குழந்தை பருவத்திலேயே கற்றுத்தர வேண்டும். வேலைக்கு செல்லும் பெற்றோராக இருப்பினும் குழந்தைகளுடன் குறைந்தது 3 மணி நேரமாவது செலவிட வேண்டும். புரதச் சத்திற்கும், ஊட்டச்சத்திற்கும் மாவு என்று தனியாக தர வேண்டாம். நாம் தரும் உணவில் பருப்பு வகைகள்,கடலை வகைகள் பயறு வகைகள் உள்ளிட்டவைகளை சேர்த்து தரலாம்.
குழந்தைகளின் மன நலம் : குழந்தைகள் நலம் என்றால் உடல் நலத்துடன் மன நலமும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் நல்ல மன நலத்துடன் இருக்க பெற்றோர்தான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். குழந்தைகள் முன் பெற்றோர் சண்டை போடுவது, மோசமாக பேசுவது போன்ற செயல்கள் குழந்தைகளை பாதிக்கும். அதிக செல்லம் கொடுப்பது. அதிகமாக கண்டிப்பது போன்றவை தவிற்கப்பட வேண்டும். குழந்தைகளின் நற் செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். அடுத்த குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம்.
குண்டான குழந்தைகள்:
தற்போது குண்டான குழந்தைகள் அதாவது குழந்தை பருவத்திலேயே குண்டாக இருக்கும் பிரச்சினை உள்ளது. இதற்கு சில தீர்வுகள்.
குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவதை தவிற்க வேண்டும். சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை சரியான அளவில் சரியான நேரத்திற்கு குழந்தைகளுக்கு தர வேண்டும். குழந்தைகள் எடை கூடாமல் இருக்க காலை உணவில் ஓட்ஸ் பால் பழம் தரலாம். குளிர் பாணங்களை தவிற்த்து இயற்கை பழ ரசங்களை தரலாம். மதிய உணவில் காய்கறிகள், காய்கறி சூப், சாலட் காய்கறி சாதம், பச்சைக் காய்கறிகள் சேர்க்க வேண்டும். மாலை வேளையில் சேண்ட்விச்சில் தக்காளி கேரட் போன்றவற்றை சேர்க்கலாம். இரவு உணவில் கோதுமை உணவு முளை கட்டிய பயறு உள்ளிட்டவை சேர்க்கலாம்.
குழந்தைகள் நலமுடன் இருக்க அவர்கள் ஓடி ஆடி விளையாட வேண்டும். அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட அனுமதிக்க வேண்டும். நடனம் நீச்சல், யோகா போன்ற பயிற்சிகள் செய்ய வைக்கலாம். குழந்தைகள் நலமுடன் இருக்க பெற்றோராகிய நாம், சிறு கவனம் அவர்கள் உடல் மற்றும் மன நலத்தில் செலுத்த வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


