முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்.திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தீர்மானம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருவள்ளூர்

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் திருவள்ளுரில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முதல்வரும்,அ.தி.மு.க பொதுச்செயலாளரமான ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் திருவள்ளுரில் நடைபெற்றது.கூட்டத்தில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வி.அலெக்சாண்டர், திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பலராமன்,அமைச்சர் பென்ஜமின், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் செவ்வை மு.சம்பத்குமார்,பூந்தமல்லி எம்.எல்.ஏ.,ஏழுமலை,திருவள்ளுர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன்,சதன் பிரபாகர்,திருவள்ளுர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.சந்திரசேகர்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் பெருவை சீனிவாசன், திருவள்ளுர் நகர இளைஞரணி செயலாளர் வேல்முருகன்,நகர செயலாளர் ஜி.கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். உலக தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவும்,உலகத்தில் ஈடு இணையற்ற தலைவராகவும்,அ.தி.மு.க-வையும்,ஒன்றரைகோடி தொண்டர்களையும் அரவணைத்து 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பெறுப்பேற்றார்.எதிர்பாரா விதமாக கடந்த 5-ந்தேதி இயற்கை எய்தியது,தமிழகத்திற்கே அதிர்ச்சியும் ,என்னிலடங்கா துயரமும் ஏற்படுத்தியுள்ளது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-க்கு பின்னால் புரட்சித்தலைவி ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களை கண் இமைபோல் காத்து வந்தவர் அம்மா.அவரது பிரிவு நமக்கு தாங்க முடியாத பேரிழப்பு.அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அம்மாவின் உடன்பிறவா சகோதரியாகவும்,உற்ற தோழியாகவும் இருந்த சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்க திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இயைஞரணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்