எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது கூறியதாவது-
பருவமழை பொய்த்து போனதால் பவானிசாகர் அணையில் நடப்பு ஆண்டில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. எனவே ஈரோட்டை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவானி ஆற்றில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவானி அணையில் தண்ணீர் இல்லாததால் பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.
கசிவுநீர் திட்டம்
திருப்பூரில் நாட்டு மாடுகளை விற்பனை செய்ய தனியாக மாட்டுச்சந்தை செயல்படுவது போல் ஈரோட்டிலும் நாட்டு மாட்டுச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் பிரதான பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது வங்கிகளில் பிரதான பயிருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. பிரதான பயிருடன் சேர்த்து ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல், தரம் சோதித்தல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உள்ள குழப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 37 கசிவுநீர் திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கசிவுநீர் திட்டத்தை தூர்வார சமூக அமைப்பு ஒன்று தயாராக உள்ளது. எனவே கசிவுநீர் திட்டங்களை விவசாயிகள் நிதி பங்களிப்புடன் சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
நதிகள் இணைப்பு
பணத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்களை பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தேசிய நீர்வழி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அதன்படி 106 ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 6 நதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறும், காவிரி ஆறும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்.
4 வழிச்சாலை
சித்தோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின்படி சிற்றூர்களில் 110 அடி, பேரூராட்சிகளில் 100 அடி, நகராட்சிகளில் 90 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நகராட்சி பகுதியில் 65 அடி என மாற்றி அமைக்கப்பட்டது. ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் நகராட்சி பகுதியில் மட்டும் ஏன் குறைவான நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டை போலவே கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 850 அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள வறட்சி மற்றும் சாகுபடிக்கான கூடுதல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை அதிகரித்து நிர்ணயம் செய்ய வேண்டும். சாய, சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் வாய்க்கால்களில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். முன்னதாக விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.
மஞ்சளை தரம் பிரித்தல்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது- ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி, டிராக்டர்களில் விற்பனை செய்வதாக புகார் வந்து உள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. எனவே வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.
மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல் குறித்து தமிழகத்தில் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கணினி வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான மென்பொருள் உருவாக்கவும், மஞ்சள் மட்டுமின்றி கொப்பரை தேங்காய், சோளம் போன்ற அனைத்து விளைபொருட்களையும் தரம் பிரித்து ஆய்வுக்கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மஞ்சளை தரம் பிரித்து பார்க்க ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த வாய்ப்பை தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருத்து கேட்பு கூட்டம்
விவசாயிகளுக்கு தேவைப்படும் எந்திரங்கள் குறித்து மனுவாக எழுதி கொடுத்தால் பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான எந்திரங்கள் குறித்து தெரிவிக்கலாம். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சித்தோடு-சத்தியமங்கலம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிக அளவிலான மரங்கள் இடையூறாக உள்ளன. இதில் உயிரோட்டம் உள்ள மரங்களை இடமாற்றி வைக்கவும், மரங்களை வெட்டுவது தொடர்பாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பணிகள் முடிந்ததும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பவானி ஆறு, காவிரி ஆறு இணைக்கும் திட்டம் தொடர்பான கடிதம் தமிழக அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
கம்பி கட்ன கதை திரை விமர்சனம்
19 Oct 2025மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை. நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப
-
பயம் உன்னை விடாது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
19 Oct 2025எஸ்.கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பயம் உன்னை விடாது.
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
டீசல் திரை விமர்சனம்
19 Oct 2025ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது
19 Oct 2025மேட்டூர் : வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
-
சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்
19 Oct 2025கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன்.
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
டியூட் திரை விமர்சனம்
19 Oct 2025தொடர் வெற்றிகளை குவித்த நாயனுக்கு சற்று சறுக்கல் கொடுத்துள்ள படம் டியூட். ப்ரதீப் ரங்கநாதன், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனியை நடத்தி வருகின்றனர்.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
பைசன் திரை விமர்சனம்
19 Oct 2025சர்வதேச கபடி போட்டியில் களம் கண்ட ஒரு சாதாரான கபடி வீரரின் வலி மிகுந்த கடந்து வந்த பாதைதான் பைசன் படக் கதை.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சேலம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நா.த.க. வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் : மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி
19 Oct 2025மேட்டூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்