எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது கூறியதாவது-
பருவமழை பொய்த்து போனதால் பவானிசாகர் அணையில் நடப்பு ஆண்டில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. எனவே ஈரோட்டை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவானி ஆற்றில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவானி அணையில் தண்ணீர் இல்லாததால் பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.
கசிவுநீர் திட்டம்
திருப்பூரில் நாட்டு மாடுகளை விற்பனை செய்ய தனியாக மாட்டுச்சந்தை செயல்படுவது போல் ஈரோட்டிலும் நாட்டு மாட்டுச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் பிரதான பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது வங்கிகளில் பிரதான பயிருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. பிரதான பயிருடன் சேர்த்து ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல், தரம் சோதித்தல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உள்ள குழப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 37 கசிவுநீர் திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கசிவுநீர் திட்டத்தை தூர்வார சமூக அமைப்பு ஒன்று தயாராக உள்ளது. எனவே கசிவுநீர் திட்டங்களை விவசாயிகள் நிதி பங்களிப்புடன் சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
நதிகள் இணைப்பு
பணத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்களை பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தேசிய நீர்வழி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அதன்படி 106 ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 6 நதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறும், காவிரி ஆறும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்.
4 வழிச்சாலை
சித்தோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின்படி சிற்றூர்களில் 110 அடி, பேரூராட்சிகளில் 100 அடி, நகராட்சிகளில் 90 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நகராட்சி பகுதியில் 65 அடி என மாற்றி அமைக்கப்பட்டது. ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் நகராட்சி பகுதியில் மட்டும் ஏன் குறைவான நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டை போலவே கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 850 அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள வறட்சி மற்றும் சாகுபடிக்கான கூடுதல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை அதிகரித்து நிர்ணயம் செய்ய வேண்டும். சாய, சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் வாய்க்கால்களில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். முன்னதாக விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.
மஞ்சளை தரம் பிரித்தல்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது- ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி, டிராக்டர்களில் விற்பனை செய்வதாக புகார் வந்து உள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. எனவே வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.
மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல் குறித்து தமிழகத்தில் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கணினி வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான மென்பொருள் உருவாக்கவும், மஞ்சள் மட்டுமின்றி கொப்பரை தேங்காய், சோளம் போன்ற அனைத்து விளைபொருட்களையும் தரம் பிரித்து ஆய்வுக்கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மஞ்சளை தரம் பிரித்து பார்க்க ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த வாய்ப்பை தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருத்து கேட்பு கூட்டம்
விவசாயிகளுக்கு தேவைப்படும் எந்திரங்கள் குறித்து மனுவாக எழுதி கொடுத்தால் பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான எந்திரங்கள் குறித்து தெரிவிக்கலாம். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சித்தோடு-சத்தியமங்கலம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிக அளவிலான மரங்கள் இடையூறாக உள்ளன. இதில் உயிரோட்டம் உள்ள மரங்களை இடமாற்றி வைக்கவும், மரங்களை வெட்டுவது தொடர்பாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பணிகள் முடிந்ததும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பவானி ஆறு, காவிரி ஆறு இணைக்கும் திட்டம் தொடர்பான கடிதம் தமிழக அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.