முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் அளவெடுக்கும் முகாம்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      தூத்துக்குடி

 

தூத்துக்குடி,

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்தஉபகரணங்களை பிரத்யேகமாக தயாரித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்க திட்டமிப்பட்டுள்ளது. இதற்காகமாற்றுத்திறனாளிகளுக்கான அளவெடுக்கும் முகாம் நடந்தது. முகாமில் ஸ்டெர்லைட் நிறுவன துணை தலைவர்முருகேஸ்வரன், மக்கள் தொடர்பு துறை தலைவர் இசக்கியப்பன், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கைலாசம்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கு லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்ல இயக்குநர் பங்குதந்தை மைக்கிள் தலைமை வகித்தார். ப்ரீடம் ட்ரஸ்ட்சேர்மன் டாக்டர் சுந்தர் தலைமையிலான நிபுணர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அளவுகளை பதிவு செய்தனர்.முகாமில் மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு அளவெடுக்கப்பட்டன. இவர்களுக்கு தனித்தனியாக உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்படும் பின்னர் அடுத்த மாதம் இந்த உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்