முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      விழுப்புரம்

கள்ளக்குறிச்சி,

 

கனங்கூர் பகுதியில் தண்ணீருக்காக சுற்றி திறிந்து வந்த புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து விட்டது. தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். கள்ளக்குறிச்சியை அடுதத கனங்கூர் காப்புக்காடு பகுதியில் மான்கள் உள்ளன. வனப் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் மான்கள் தண்ணீருக்கு அலைமோதுகின்றன. தண்ணீருக்காக அலைந்த மான் கிருஷ்ணன் மகன் முத்துக்குமார் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இவருக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து மான் சப்தம் கேடகவே சுற்றி பார்த்தும் தெரியவில்லை. பின்னர் கினற்றுக்குள் பார்க்கவே மான் தண்ணீரில் கிடப்பது தெரிய வந்தது. உடனே கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அத் தகவலின் பேரில் தீயணைப்புக் குழுவினர் 3 வயது மதிக்கத்தக்க புள்ளி மானை உயிருடன் மீட்டு வனவர் பிரபாகரனிடம் ஒப்படைந்தனர். அவர் காட்டு பகுதியில் விட்டு விட்டார். அப்பகுதி மக்கள் கிணற்றில் விழுந்த மானை பார்ப்பதற்காக கூட்டம் கூடி விட்டனர். என்பது குறிப்பிடத் தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்