முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து கணவன்-மனைவி உள்பட 4 பேர் சாவு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      ஈரோடு

பவானி ஆற்றில்பரிசல் கவிழ்ந்து மூழ்கியதில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் இறந்தனர்.இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

பவானிசாகர் அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 63). இவருடைய உறவினர் ஜோசப் பவுல்ராஜ் (29). நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஆசாத் ஜெனிபர் (25).இந்த நிலையில் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக தேவசகாயத்தின் வீட்டுக்கு ஜோசப் பவுல்ராஜ், அவருடைய மனைவி ஆசாத் ஜெனிபர், திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆலன் பிரான்சிஸ் (22), சத்தியமங்கலத்தை சேர்ந்த சாமுவேல் விக்டர் என்பவரின் மகன்கள் ஜார்ஜ் அர்வின் (22), எட்வின் (12) ஆகியோர் வந்து இருந்தனர்.

பரிசல் கவிழ்ந்தது

 இதைத்தொடர்ந்து  நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள பவானி ஆற்றுக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது அங்குள்ள பரிசலில் ஏறி பவானி ஆற்றை சுற்றி பார்க்க விரும்பினர். இதையடுத்து பரிசலில் ஜோசப் பவுல்ராஜ், ஆசாத் ஜெனிபர், ஆலன் பிரான்சிஸ், அர்வின், எட்வின் ஆகிய 5 பேர் ஏறி உள்ளனர். பரிசலை நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த டேவிட் பிரான்சிஸ் (45) என்பவர் ஓட்டினார். அனைவரும் பரிசலில் உட்கார்ந்தவாறு பவானி ஆற்றின் அழகை கண்டு மகிழ்ந்தபடி பயணித்தனர். பவானி ஆற்றின் நடுவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பரிசல் கவிழ்ந்தது.

4 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

இதில் பரிசலில் பயணம் செய்த 6 பேரும் ஆற்றில் தத்தளித்தனர். பரிசல் ஓட்டியான டேவிட் பிரான்சிஸ், எட்வின் ஆகியோருக்கு நீச்சல் தெரிந்ததால்  2 பேரும் தண்ணீரில் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால் மற்ற 4 பேருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் அந்த 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி 2 மணி நேரம் போராடி 4 பேரின் உடல்களையும் மீட்டனர். 4 பேரின் உடல்ளை பார்த்ததும் தேவசகாயம் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் கதறி அழுதனர்

விசாரணை

 இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு வந்தபோது பவானி ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் நெரிஞ்சிப்பேட்டை கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago