எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி, பாலக்காட்டூர், சூரியம்பாளையம் மண்டலம் 1 பகுதியில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் இன்று (19.01.2017) மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15 கோடியே 98 இலட்சம் மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு) கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை வழங்கியுள்ளார்கள். இத்திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாமல், தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ள்ளார்கள். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகங்கள், 4 செட் சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கியுள்ளார்கள். சமூக நலத்துறையின் மூலம் ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக வழங்கியவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா .
அதேபோல் வீடுகளுக்கு 100 யூனிட் வரையிலும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கியுள்ளார்கள். ஏழை, எளியோர் அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்தி வாழ்வில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்ததாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய குடியிருப்பு கட்ட நிதியுதவி வழங்கப்படும். குடிசைப்பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள குடிசைகளில் உள்ள குடும்பங்கள் தாங்கள் வாழும் இடத்தின் நில உரிமத்திற்கான ஆவணம் உடையவர்களாக இருப்பின் பயனாளிகள் தாமாக வீடுகளை கட்டுதல் திட்டத்தின் கீழ் தகுதி உடையவர்களாவர். தாங்கள் வசிக்கும் மனைக்கான பட்டா இருந்தால் போதுமானதாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் தங்களது பகுதியிலுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தினை அணுகி அதற்கான மனுவினை அளிக்கும் பட்சத்தில் அப்பகுதிக்கு ஒருங்கிணைந்த வீட்டுவசதி திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இத்திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட மத்திய அரசால் ரூ.1.50 இலட்சம் மற்றும் மாநில அரசால் ரூ.60,000ஃ- மொத்தம் மானியமாக ரூ.2.10 இலட்சம் வழங்கப்பட்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை 4 தவணையாக அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளிகள் வீட்டின் அடித்தளம் அமைத்தவுடன் முதல் தவணைத் தொகையாக ரூ.50,000ஃ-, கதவு மற்றும் ஜன்னல் மேல்மட்டம் கட்டி முடித்தவுடன் 2வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, கான்கிரீட் மேற்கூரை முடித்தவுடன் 3-வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, அனைத்து கட்டுமான பணிகளும் கட்டி முடித்தவுடன் 4-வது தவணைத்தொகையாக ரூ.60,000ஃ- என மொத்தம் ரூ.2.10 இலட்சம் வழங்கப்படும். பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15.98 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டிட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ)கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் வெ.சுப்பிரமணியன் (கோவை சரகம்), கண்காணிப்பு பொறியாளர் வி.சுப்பிரமணியன் (ஈரோடு), நிர்வாக பொறியாளர் கே.ஜி.நஞ்சப்பன், உதவி பொறியாளர் தமிழரசு, உதவி செயற்பொறியாளர் டி.ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்கள்; இதுவரை 1,200 பேர் பலி
02 Dec 2025ஜகார்த்தா : ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்களால் நடப்பாண்டில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்த தகவல் வெளியீடு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று கார்த்திகை தீபத்திருவிழா: தி.மலை கிரிவலப்பாதையில் 1,060 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
-
புதுவையில் விஜய் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
02 Dec 2025புதுச்சேரி : புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.
-
வேலூரில் நெஞ்சை உலுக்கிய துயரம்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலியான சோகம்
02 Dec 2025வேலூர் : வேலூரில் மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாடு முழுவதும் 9.86 லட்சம் பேர் பயன்
02 Dec 2025சென்னை : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 9.86 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
-
சஞ்சார் சாதி கட்டாயமா? - மத்திய அமைச்சர் விளக்கம்
02 Dec 2025புதுடெல்லி : சஞ்சார் சாதி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமை என்று பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக தொடர் அமளி : அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
02 Dec 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
02 Dec 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை நீடித்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு விருந்து அளிக்கப்பட்
-
விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது ஏன்? - புதுச்சேரி சபாநாயகர் விளக்கம்
02 Dec 2025புதுச்சேரி : புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
-
செயல்பாட்டு திறனை மேம்படுத்த 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு
02 Dec 2025புதுடெல்லி : வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அர
-
வாழ்வு ஒளிமயமாக திகழ வேண்டும்: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2025சென்னை : மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள்
-
போதைப்பொருள் கடத்தல்: நடப்பாண்டில் மட்டும் சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
02 Dec 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு 22 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 17 பேருக்கு மரண தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஆசிரியை கொலை வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி
02 Dec 2025தஞ்சை : ஆசிரியை கொலை வழக்கில் கைதான பெயிண்டர் சிறையில் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
-
பீகார் சட்டசபை சபாநாயகராக பிரேம்குமார் ஒருமனதாக தேர்வு
02 Dec 2025பாட்னா : பீகார் சட்ட சபை சபாநாயகராக பா.ஜ.க. மூத்த தலைவர் பிரேம் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
-
பேரிடரில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பிய பாக்.
02 Dec 2025கொழும்பு : இலங்கைக்கு பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பியது பாகிஸ்தான் அரசு.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது : கடற்படை தளபதி தகவல்
02 Dec 2025டெல்லி : பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு
03 Dec 2025புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


