எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக் கழகத்தின் சார்பில் ஜவ்வாது மலையில் உள்ள மலைவாழ் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று இயற்கைவழி வேளாண்மை முறைகள் பற்றிய கருத்துக்களை விளக்கினர். விஐடி பல்கலைக் கழகத்தின் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஜவ்வாதுமலை கிராமவள மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய மகத்துவ மையம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மலைவாழ் மக்களுக்கான இயற்கை வழி வேளாண்மை பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்த உழவர் மன்றங்கள், விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள், விவசாயிகள் என 140 பேர் பங்கேற்றனர். முகாம் தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை விஐடி பல்கலைக் கழகத்தின் ஜமுனாமரத்தூர் கிராமவள மைய திட்ட இணையர் எஸ்.பாபு வரவேற்றார். ஜமுனாமரத்தூர் உதவி வேளாண்மை இயக்குநர்கள் பி.வடமலை, பி.சண்முகவேல், ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.பாண்டியன், ஆர்.ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மரிய ஜோசப், அன்பரசு, கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றம் தலைவர் முனைவர். பி.பரசுராமன் பங்கேற்று பேசுகையில் வேளாண்மை பணியில் இயற்கை வழியில் பசுந்தால் உரங்கள், இயற்கை உரங்கள், தொழு உரம், நுன்னுயிர் உரங்கள், இயற்கை நோய் மற்றும் பூச்சி முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் கடைபிடித்தால் அதிக மகசூல் பெற முடியும். எனவே இயற்கை வழி வேளாண்மை முறையை பின்பற்றினால் மண்ணுக்கும் மனிதனுக்கும் பாதுகாப்பாக அமையும் என்றார். பயிற்சி முகாமில் விஐடி பல்கலைக்கழகத்தின் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திட்ட அலுவலர் முனைவர். ஆர்.முத்துவீரன் பங்கேற்று விஐடி பலக்லைக்கழகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சமுதாய வளர்ச்சி பணிகள், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கான திட்டப்பணிகள் பற்றி விளக்கி பேசினார். இதில் வேலூர் மாவட்டம் குருவராஜபாளையம் பகுதியில் உள்ள இயற்கை வேளாண்மை பண்மையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர். கே.கிருஷ்ண மனோகரன் பங்கேற்று விவசாயிகளுக்கிடையே பேசுகையில் கூறியதாவது் அதிகமான விளைச்சலுக்காக ரசாயன வழிமுறையில் விவசாயம் செய்யும் போது மண்ணின் இயற்கை நிலை மாசுபடுவதுடன் விளைபொருட்களை உண்ணும் போது உடலில் பக்க விளைவுகள் அதிகமாக தோன்றி உடல் வியாதிகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது. அதே நேரத்தில் இயற்கை வழி வேளாண்மை செய்யும் போது இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இயற்கை வழியில் தாவர பொருட்களின் தொழு உரம், கடலை, வேப்பம், புங்கன் மற்றும் முத்து புண்ணாக்குகளை தகுந்த விகிதத்தில் சேர்த்து வேளாண்மையில் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். முடிவில் திட்ட உதவியாளர் இ.செல்வராஜ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்