எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டியில் 878 மாணவ,மாணவியருக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி சி.கோபாலகிருஷ்ணன் எம்.பிஆகியோர் வழங்கினார்.
878 விலையில்லா மிதிவண்டிகள்
தமிழக அரசின் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ஊட்டியிலுள்ள பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்று பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவர்கள், 584 மாணவியர்கள் என மொத்தம் 878 மாணவர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது_
கல்வி வளர்ச்சியில் முதலிடம்
மாணவர்களுக்கு முறையான கல்வியை அளித்துவிட்டால் நாடு முன்னேறிவிடும் என்ற அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் அம்மா கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார். கல்வி வளர்ச்சிக்குறியீட்டில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதற்குக்காரணம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதத்தை தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு வழங்குகிறது. இதற்கு அடிப்படை காரணம் முன்னாள் முதலமைச்சர் அம்மா
பிள்ளைகள் மீது பேரண்பு கொண்டவர். பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முன்னேறி விடும் என்று செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறை எங்குமே இல்லாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் பள்ளியில் படிப்பவர்களுக்கு தேவையான ஜமன்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில் போன்ற பொருட்களை வாங்குவதற்குக்கூட கஷ்டப்பட்ட காலம் உண்டு.
நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை
ஆனால் இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும், சீருடையில் இருந்து புத்தகம், நோட்டுபுத்தகம், புத்தகப்பை, காலணி, ஜான்ட்ரி பாக்ஸ் போன்ற அனைத்து பொருட்களும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அக்காலத்தில் அட்லஸ்ஸை பார்த்ததே கிடையாது. ஆனால் இன்று மாணவச்செல்வங்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது. ஒரு காலத்தில் மிட்டா, மிராசு வீட்டுப்பிள்ளைகள் மடியில் இருந்து வந்த மடிக்கணினியை இன்று குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் மடியில் தவழும் வகையில் தமிழக முதலமைச்சர் அம்மா விலையில்லா மடிக்கணினியையும் தந்துள்ளார். கிராமப்பகுதியில் இருந்து பள்ளிக்கு வருபவர்களுக்கு இலவச பஸ்பாஸ். அருகில் இருந்து வரும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியும் தந்துள்ளார் நமது முதலமைச்சர். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக படித்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பொ.சங்கர் பேசினார்.
விழாவில் தாட்கோ வாரிய முன்னாள் தலைவர் எஸ்.கலைச்செல்வன், என்சிஎம்எஸ் தலைவர் கண்ணபிரான், கூட்டுறவு சங்க இயக்குநர் ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் நன்றி கூறினார். இவ்விழாவில் பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 276 பேருக்கும், சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 288 பேருக்கும், புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 242 பேருக்கும், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 52, மாணவியர்கள் 20 என 72 பேருக்கும் என 4 பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவர்கள், 584 மாணவியர்களுக்கு மொத்தம் 878 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!
13 Jul 2025டெஹ்ரான்: கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
-
உல்பா பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்
13 Jul 2025கவுகாத்தி: தங்கள் முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது,'' என உல்பா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
-
155 செயற்கை கோள்களை அடுத்த 3 ஆண்டுகளில் ஏவ இஸ்ரோ திட்டம்
13 Jul 2025குலசேகரம்: இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
கில்லை சமாதானப்படுத்திய டக்கெட்
13 Jul 2025இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
-
கடைசி போட்டியில் இங்கி. வெற்றி: டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா
13 Jul 2025லண்டன்: கடைசி போட்டியில் தோல்வியடைந்த போதும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது.
-
3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி தடுமாற்றம்
13 Jul 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில், இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.
பும்ரா 5 விக்கெட்...
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.