எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டியில் 878 மாணவ,மாணவியருக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி சி.கோபாலகிருஷ்ணன் எம்.பிஆகியோர் வழங்கினார்.
878 விலையில்லா மிதிவண்டிகள்
தமிழக அரசின் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ஊட்டியிலுள்ள பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்று பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவர்கள், 584 மாணவியர்கள் என மொத்தம் 878 மாணவர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது_
கல்வி வளர்ச்சியில் முதலிடம்
மாணவர்களுக்கு முறையான கல்வியை அளித்துவிட்டால் நாடு முன்னேறிவிடும் என்ற அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் அம்மா கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார். கல்வி வளர்ச்சிக்குறியீட்டில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதற்குக்காரணம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதத்தை தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு வழங்குகிறது. இதற்கு அடிப்படை காரணம் முன்னாள் முதலமைச்சர் அம்மா
பிள்ளைகள் மீது பேரண்பு கொண்டவர். பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முன்னேறி விடும் என்று செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறை எங்குமே இல்லாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் பள்ளியில் படிப்பவர்களுக்கு தேவையான ஜமன்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில் போன்ற பொருட்களை வாங்குவதற்குக்கூட கஷ்டப்பட்ட காலம் உண்டு.
நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை
ஆனால் இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும், சீருடையில் இருந்து புத்தகம், நோட்டுபுத்தகம், புத்தகப்பை, காலணி, ஜான்ட்ரி பாக்ஸ் போன்ற அனைத்து பொருட்களும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அக்காலத்தில் அட்லஸ்ஸை பார்த்ததே கிடையாது. ஆனால் இன்று மாணவச்செல்வங்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது. ஒரு காலத்தில் மிட்டா, மிராசு வீட்டுப்பிள்ளைகள் மடியில் இருந்து வந்த மடிக்கணினியை இன்று குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் மடியில் தவழும் வகையில் தமிழக முதலமைச்சர் அம்மா விலையில்லா மடிக்கணினியையும் தந்துள்ளார். கிராமப்பகுதியில் இருந்து பள்ளிக்கு வருபவர்களுக்கு இலவச பஸ்பாஸ். அருகில் இருந்து வரும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியும் தந்துள்ளார் நமது முதலமைச்சர். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக படித்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பொ.சங்கர் பேசினார்.
விழாவில் தாட்கோ வாரிய முன்னாள் தலைவர் எஸ்.கலைச்செல்வன், என்சிஎம்எஸ் தலைவர் கண்ணபிரான், கூட்டுறவு சங்க இயக்குநர் ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் நன்றி கூறினார். இவ்விழாவில் பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 276 பேருக்கும், சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 288 பேருக்கும், புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 242 பேருக்கும், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 52, மாணவியர்கள் 20 என 72 பேருக்கும் என 4 பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவர்கள், 584 மாணவியர்களுக்கு மொத்தம் 878 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
01 Dec 2025புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவ
-
ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்
01 Dec 2025கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார்.
-
55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது
01 Dec 2025சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
மகர விளக்கு சீசன்:கடந்த 15 நாட்களில் சபரிமலையில் ரூ.92 கோடி வருவாய்
01 Dec 2025திருவனந்தபுரம், மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
01 Dec 2025புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய
-
தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பார்லி., மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கேக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
மீண்டும் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை..! ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
01 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
01 Dec 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
01 Dec 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விராட் கோலி குறித்து யான்சென்
01 Dec 2025விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அண
-
18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன்: திருமாவளவன்
01 Dec 2025வேலூர், 18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆதங்கத்துன் தெரிவித்துள்ளார்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
01 Dec 2025சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
-
டித்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
01 Dec 2025சென்னை, டித்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்
01 Dec 2025சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி. சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை
-
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க குளங்கள் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
01 Dec 2025சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை ப
-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
01 Dec 2025சென்னை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிசுமையால் உ.பி.யில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
01 Dec 2025லக்னோ : வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
-
வட மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை மையம் தகவல்
01 Dec 2025சென்னை, சென்னை வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: முதல் நாளே முடங்கியது மக்களவை
01 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் மக்களவை முதல
-
அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்
01 Dec 2025மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத்.
-
துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்
01 Dec 2025துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும் படம் ஐ அம் கேம்.
-
அவர் பெரிய தலைவர் இல்லை: இ.பி.எஸ். விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்
01 Dec 2025கோவை : எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
-
கார்கே, ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


