முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு:

புதன்கிழமை, 8 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருநெல்வேலி சென்றிடும் வழியில் திருமங்கலம் நகருக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமிக்கு கப்பலூர் டோல்கேட் பகுதியில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கப்பலூரில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு:

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி செல்லும் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி திருமங்கலம் நகருக்கு நேற்று முன்தினம் இரவு வருகை புரிந்தார். இதையடுத்து முதன்முதலில் திருமங்கலம் நகருக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமிக்கு கப்பலூர் டோல்கேட் பகுதியில் வைத்து தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகளும்,தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.அப்போது தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் நீண்ட வரிசையில் நின்று பொன்னாடைகள் அணிவித்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்தும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.இந்த வரவேற்பின் போது தமிழக முதல்வருக்கு,வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் நினைவு பரிசினை வழங்கி பொன்னாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.திருமங்கலம் நகர் எல்கையில் தன்னை உற்சாகமாக வரவேற்ற அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும்,தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி. கே.பழனிசாமி பின்னர் நெல்லை நோக்கி காரில் புறப்பட்டு சென்றார்.

கள்ளிக்குடியில் முதல்வருக்கு எழுச்சிமிகு வரவேற்பு:

இதனிடையே நெல்லையில் அரசுவிழாவை முடித்துக் கொண்டு மதுரையில் நடைபெறும் அரசுவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமிக்கு மதுரை மாவட்ட எல்கையில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடியில் வைத்து தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து நேற்று மதியம் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.அப்போது நூற்றுக் கணக்கான பெண்கள் கள்ளிக்குடி பகுதியில் விளைந்திருந்த காய்,கறிகளைக் கொண்டு முதல்வருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.இதையடுத்து வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி மதுரையில் நடைபெறும் அரசுவிழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.

இந்த வரவேற்பு நிகழச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ்,பெரியபுள்ளான்(எ)செல்வம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தமிழரசன்,கருப்பையா,முன்னாள்செயலாளர் ஜெயராமன்,மாவட்ட அவைதலைவர் ராஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர்கள் அய்யப்பன்,பஞ்சம்மாள், பஞ்சவர்ணம்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் ஓம்கேசந்திரன்,தமிழ்செல்வம்,திருப்பதி, வக்கீல்ரமேஷ்,ஆண்டிச்சாமி,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட கழக,நகர்கழக,ஒன்றியகழக,கிளைகழக,பேரூர்கழக நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்