எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்திலுள்ள பொன்னார் குளம் ஏரி, பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் குடிமராமத்து புனரமைக்கும் பணி துவக்க விழா நேற்று (13.03.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா கலந்து கொண்டு பொன்னார் குளம் ஏரி குடிமராமத்து மூலம் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்கள். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே மக்கள் பணியாற்றி வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா விவசாயிகளையும், அதை சார்ந்த தொழிலையும் பாதுகாத்திட மழைநீர் சேமிப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்கும், குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்கள், தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் துவங்கப்படும் என ஆணையிட்டார்கள். அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு அப்பணிகளை துரிதப்படுத்தி இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் இப்புனரமைக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் திட்டத்தின்கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரி நீர்வரத்து கால்வாய்கள் ஆழப்படுத்தியும், அகலப்படுத்தும் பணிகளும், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் மொத்தம் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 16 ஏரி, குளங்கள், கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ளுவதற்கு விவசாயிகளின் பங்கு மிகமிக முக்கியமானதாகும். இப்பணிகளை மேற்கொள்ள விவசாயிகளின் சார்பில் குழு அமைக்கப்பட்டு அதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நபார்டு நிதியுதவியுடன் நடைபெறுகின்ற இப்பணி விவசாயிகளின் பங்களிப்புத் தொகை 10 சதவீதமும், நபார்டு நிதியுதவி 90 சதவீதமும் சேர்த்து 100 சதவீதம் நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைநீரை சேமிப்பதற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் அதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பதற்கும் இத்திட்டம் மிகவும் முக்கியமான பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தின்மூலம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படுவதோடு நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆரம்பம்முதல் இறுதி வரை கண்டறியப்பட்டு அனைத்து நீர்வள கால்வாய்களும், ஆழப்படுத்தி அகலப்படுத்துவதோடு, நீர்வரத்து தடையின்றி வந்துசேர்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும், இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபோன்ற குளங்கள் ஏரிகள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளுவதன் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரும் உயரும் நிலை உருவாகும். இன்று குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படவுள்ள பொன்னார்குளம் ஏரிக்கு கொல்லிமலையில் உற்பத்தியாகும் குண்டுமடுவு ஆற்றின் மூலம் நீர் கிடைக்கப்பெறுகின்றது. இந்த ஏரியில் 4 மதகுகளும், ஒரு வழிந்தோடியும் உள்ளன. ஏரிக்கரை 1600 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த ஏரியின் மூலம் 153.070 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பளவில் பயன்படுகின்றது. மேலும் இந்த ஏரியின் மூலம் பொன்னார்குளம் மற்றும் அக்கியம்பட்டி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியின் முழு கொள்ளளவு உயரம் 181.235 மீட்டர் ஆகும். ஏரிக்கரையின் முழுஉயரம் 183.095 மீட்டராகும். ஏரியின் முழு நீர்கொள்ளளவு 11.30 மில்லியன் கனஆகும். ஏரியின் நீர்த்தேங்கியுள்ள பகுதி 42.90 ஹெக்டேர் (ஏறத்தாழ 100 ஏக்கர்) ஆகும். இந்த ஏரிக்கு வருகின்ற நீர்வரத்து கால்வாயின் நீளம் 7500 மீட்டர் ஆகும். இவ்வாறு அமைந்துள்ள இந்த பொன்னார் குளம் ஏரியானது ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து மூலம் கரையை பலப்படுத்தி ஏரியின் வழிந்தோடியில் கான்கிரீட் சுவர் அமைத்து நீர்கசிவை ஏற்படுவதை தடுத்திடவும், பாசனதாரர்களின் 10 சதவீத பங்களிப்போடு குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்து பணி திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பை முழுமையாக அளித்திட வேண்டும். இப்பணி விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைவர் கண்காணிப்பில் நடைபெறுகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகள் உள்ளன. மேலும் மேட்டூர் டிவிசன் கிழக்கு கரை பாசன பகுதியின் 3 பாசன வாய்க்கால்கள் இடம்பெற்றுள்ளன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார கட்டுப்பாட்டில் உள்ள 13 ஏரிகளுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலும், 3 கால்வாய்கள் தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 16 ஏரி குளங்கள், கால்வாய்கள் குடிமராத்து திட்டத்தின்கீழ் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீர்வரத்து கால்வாய்கள் சரிசெய்யப்பட்டு மழை காலங்களில் வருகின்ற நீர் தடையின்றி இந்த ஏரிகள் மற்றும் குளங்களில் தேங்குவதற்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும். இத்திட்டத்தினை விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பங்கேற்று தங்களின் பங்களிப்பை செலுத்தி இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர், நாமக்கல் ஆர்.பாஸ்கரன், இராசிபுரம் ஜெ.கோபி, உதவி பொறியாளர் சேந்தமங்கலம் ஆர்.சதீஸ்குமார், சேந்தமங்கலம் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.வெங்கடாசலம், எம்.முனியப்பன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மின்னாம்பள்ளி கே.நடேசன், அட்மா கமிட்டி தலைவர்கள் ஜி.பி.வரதராஜன், எம்.காளியப்பன், ஆர்.சி.எம்.எஸ். தலைவர் எஸ்.பி.தாமோதரன், நாமகிரிப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, அக்கியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சி.சுப்ரமணியம் உட்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
தெரு நாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு
01 Nov 2025புதுடெல்லி : தெரு நாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
01 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதி வழிகாட்டு நெறிமுறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
01 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான புதிய ேவழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன் : பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
01 Nov 2025சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும்,வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ல


