எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்திலுள்ள பொன்னார் குளம் ஏரி, பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் குடிமராமத்து புனரமைக்கும் பணி துவக்க விழா நேற்று (13.03.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா கலந்து கொண்டு பொன்னார் குளம் ஏரி குடிமராமத்து மூலம் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்கள். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே மக்கள் பணியாற்றி வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா விவசாயிகளையும், அதை சார்ந்த தொழிலையும் பாதுகாத்திட மழைநீர் சேமிப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்கும், குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்கள், தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் துவங்கப்படும் என ஆணையிட்டார்கள். அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு அப்பணிகளை துரிதப்படுத்தி இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் இப்புனரமைக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் திட்டத்தின்கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரி நீர்வரத்து கால்வாய்கள் ஆழப்படுத்தியும், அகலப்படுத்தும் பணிகளும், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் மொத்தம் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 16 ஏரி, குளங்கள், கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ளுவதற்கு விவசாயிகளின் பங்கு மிகமிக முக்கியமானதாகும். இப்பணிகளை மேற்கொள்ள விவசாயிகளின் சார்பில் குழு அமைக்கப்பட்டு அதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நபார்டு நிதியுதவியுடன் நடைபெறுகின்ற இப்பணி விவசாயிகளின் பங்களிப்புத் தொகை 10 சதவீதமும், நபார்டு நிதியுதவி 90 சதவீதமும் சேர்த்து 100 சதவீதம் நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைநீரை சேமிப்பதற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் அதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பதற்கும் இத்திட்டம் மிகவும் முக்கியமான பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தின்மூலம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படுவதோடு நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆரம்பம்முதல் இறுதி வரை கண்டறியப்பட்டு அனைத்து நீர்வள கால்வாய்களும், ஆழப்படுத்தி அகலப்படுத்துவதோடு, நீர்வரத்து தடையின்றி வந்துசேர்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும், இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபோன்ற குளங்கள் ஏரிகள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளுவதன் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரும் உயரும் நிலை உருவாகும். இன்று குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படவுள்ள பொன்னார்குளம் ஏரிக்கு கொல்லிமலையில் உற்பத்தியாகும் குண்டுமடுவு ஆற்றின் மூலம் நீர் கிடைக்கப்பெறுகின்றது. இந்த ஏரியில் 4 மதகுகளும், ஒரு வழிந்தோடியும் உள்ளன. ஏரிக்கரை 1600 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த ஏரியின் மூலம் 153.070 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பளவில் பயன்படுகின்றது. மேலும் இந்த ஏரியின் மூலம் பொன்னார்குளம் மற்றும் அக்கியம்பட்டி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியின் முழு கொள்ளளவு உயரம் 181.235 மீட்டர் ஆகும். ஏரிக்கரையின் முழுஉயரம் 183.095 மீட்டராகும். ஏரியின் முழு நீர்கொள்ளளவு 11.30 மில்லியன் கனஆகும். ஏரியின் நீர்த்தேங்கியுள்ள பகுதி 42.90 ஹெக்டேர் (ஏறத்தாழ 100 ஏக்கர்) ஆகும். இந்த ஏரிக்கு வருகின்ற நீர்வரத்து கால்வாயின் நீளம் 7500 மீட்டர் ஆகும். இவ்வாறு அமைந்துள்ள இந்த பொன்னார் குளம் ஏரியானது ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து மூலம் கரையை பலப்படுத்தி ஏரியின் வழிந்தோடியில் கான்கிரீட் சுவர் அமைத்து நீர்கசிவை ஏற்படுவதை தடுத்திடவும், பாசனதாரர்களின் 10 சதவீத பங்களிப்போடு குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்து பணி திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பை முழுமையாக அளித்திட வேண்டும். இப்பணி விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைவர் கண்காணிப்பில் நடைபெறுகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகள் உள்ளன. மேலும் மேட்டூர் டிவிசன் கிழக்கு கரை பாசன பகுதியின் 3 பாசன வாய்க்கால்கள் இடம்பெற்றுள்ளன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார கட்டுப்பாட்டில் உள்ள 13 ஏரிகளுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலும், 3 கால்வாய்கள் தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 16 ஏரி குளங்கள், கால்வாய்கள் குடிமராத்து திட்டத்தின்கீழ் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீர்வரத்து கால்வாய்கள் சரிசெய்யப்பட்டு மழை காலங்களில் வருகின்ற நீர் தடையின்றி இந்த ஏரிகள் மற்றும் குளங்களில் தேங்குவதற்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும். இத்திட்டத்தினை விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பங்கேற்று தங்களின் பங்களிப்பை செலுத்தி இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர், நாமக்கல் ஆர்.பாஸ்கரன், இராசிபுரம் ஜெ.கோபி, உதவி பொறியாளர் சேந்தமங்கலம் ஆர்.சதீஸ்குமார், சேந்தமங்கலம் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.வெங்கடாசலம், எம்.முனியப்பன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மின்னாம்பள்ளி கே.நடேசன், அட்மா கமிட்டி தலைவர்கள் ஜி.பி.வரதராஜன், எம்.காளியப்பன், ஆர்.சி.எம்.எஸ். தலைவர் எஸ்.பி.தாமோதரன், நாமகிரிப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, அக்கியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சி.சுப்ரமணியம் உட்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.