எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்ளும் வகையில் கருவி ஒன்றை ஓசூர் மாணவர் கண்டுபிடித்துள்ளார். இவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,, பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பாராட்டி கவுரவித்துள்ளனர்.ஜனாதிபதியின் இன்னொவேஷன் ஸ்காலர்ஸ் இன்ரெசிடென்ட்ஸ் புரோக்ராம் என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8 கண்டுபிடிப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில், குடியரசு தலைவரால் விருது வழங்கி, கவுரவிக்கப்படுகிறார்கள். தேசிய அளவில் நன்மை தருகிற, புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே இந்த திட்டத்தில் இடம் பெற முடியும். அந்த வகையில், மாரடைப்பு ஏற்படுவதை கண்டுபிடிக்க, கருவியை கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார் ஓசூர் மாணவர் ஆகாஷ்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சிப்காட் வளாகத்தில் ஈ.எஸ்.ஐ. மருத்துவனை அருகே வசித்து வருபவர் மனோஜ்&சவுமியலதா தம்பதியரின் மகன் ஆகாஷ். இவர், ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10&ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மனோஜ் தொழிலதிபர் ஆவார்.இந்நிலையில், மாணவர் ஆகாஷ், மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும்வகையில், கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை பயன்படுத்தி மாரடைப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.. என்கிறார் அந்த மாணவர். தனது கண்டுபிடிப்பு குறித்து ஆகாஷ் நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கருவியை கண்டுபிடித்தேன். எனது தாத்தா பிரபாகரன் நன்றாக இருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு வந்து இறந்து போனார். அவரது மரணம் என்னை வெகுவாக பாதித்தது. திடீர்னு வந்து ஆளையே கொல்லும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்கை கண்டுபிடிக்கனும் என்கிற எனது நோக்கம், தாத்தாவின் மரணத்தினால்தான் உந்துதலை ஏற்படுத்தியது. நான் கண்டுபிடித்துள்ள இந்த கருவி மூலம் 6 மணி நேரத்திற்கு முன்பே, மாரடைப்பு வருவதை அறிந்து கொள்ள முடியும். இக்கருவி தோலில் ஒட்டக்கூடியதாகும். இதனை கை மணிக்கட்டில் பொருத்திக்கொள்ளலாம். இதிலிருந்து சின்னதாக ஒரு பாசிட்டிவ் மின்சார தூண்டுதல் வெளியாகும். அது இதயத்திலிருந்து மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கையாக வெளியாகும் நெகட்டிவ் புரோட்டீனை ஈர்க்கும், இதன் மூலமாக எப்.ஏ.பி.பி.3 புரோட்டீனின் அளவு அதிகமாக இருந்தால் உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த கருவியை தற்போது டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சோதனைக்காக வழங்கியுள்ளேன். அடுத்த(2018) ஆண்டு இறுதியில் இந்த கருவி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ.900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனது கண்டுபிடிப்பு கருவிக்கான காப்புரிமைக்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளேன். மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் தனி கவனம் செலுத்தி, எனக்காக ஒரு குழுவை அமைத்து ஒரு ஆண்டுக்குள் காப்புரிமை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். ஜப்பானில் உள்ள டோக்கியோ யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ்பல்கலைகழகமும். எனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.எனது கண்டுபிடிப்பை பாராட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 15ந் தேதி டெல்லியில் நடந்த விழாவில், எனக்கு ராஷ்டிரபதி நவபிரக்தன் புரஸ்கார் என்ற விருதினை வழங்கினார். மேலும் பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்களும் என்னை வெகுவாக பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். உயிரியல் தொழில்நுட்பத்துறையுடன் கூட்டு சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். மேலும் என் திட்டத்தை, தனியார் நிறுவனங்களுக்கு பதிலாக அரசே ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அப்போதுதான், எனது கண்டுபிடிப்பு கருவி சந்தையில், வெறும் 900 ரூபாய்க்கு கிடைக்கும். பொதுமக்களுக்கும் பயன் தரும் இவ்வாறு ஆகாஷ் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, ஆகாஷின் தந்தை மனோஜ் உடனிருந்தார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
01 Dec 2025புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவ
-
55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது
01 Dec 2025சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்
01 Dec 2025கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார்.
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
மகர விளக்கு சீசன்:கடந்த 15 நாட்களில் சபரிமலையில் ரூ.92 கோடி வருவாய்
01 Dec 2025திருவனந்தபுரம், மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்
01 Dec 2025சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி. சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை
-
தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பார்லி., மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கேக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
01 Dec 2025சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
-
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
01 Dec 2025புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
01 Dec 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்
01 Dec 2025மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத்.
-
துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்
01 Dec 2025துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும் படம் ஐ அம் கேம்.
-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
01 Dec 2025சென்னை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க குளங்கள் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
01 Dec 2025சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை ப
-
மீண்டும் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை..! ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
01 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
எஸ்.ஐ.ஆர். பணிசுமையால் உ.பி.யில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
01 Dec 2025லக்னோ : வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
-
அவர் பெரிய தலைவர் இல்லை: இ.பி.எஸ். விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்
01 Dec 2025கோவை : எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
-
கார்கே, ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: முதல் நாளே முடங்கியது மக்களவை
01 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் மக்களவை முதல
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 151 ஆக உயர்வு
01 Dec 2025ஹாங்காங், ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151 பேர் ஆக உயர்ந்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
01 Dec 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விராட் கோலி குறித்து யான்சென்
01 Dec 2025விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அண
-
பீகார் சட்டசபை சபாநாயகரை தேர்வு செய்ய இன்று தேர்தல் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
01 Dec 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை கூடியதை தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகர் நரேந்திர நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-
திருப்பதியில் பலத்த மழை
01 Dec 2025திருப்பதி : திருப்பதியில் கனமழை காரணமாக பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.


