முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 132 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஆரணி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 132 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். ஆரணி நகரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வட்டாட்சியர் தமிழ்மணி பயனாளிகளிடம் மனுக்களை பெற்று துவக்கி வைத்தார். மேலும் இதில் இடர்பாடு நிவாரண வட்டாட்சியர் சேகர், வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி வருவாய் அலுவலர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ், இளவரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் 132 மனுக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்