முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      விழுப்புரம்

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் மற்றும் வங்கி கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்துக்கு கூடுதல் நிதி, காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்திட மத்திய பாஜக அரசையும், மாநில அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வல்லம், மயிலம், ஒலக்கூர் ஆகிய வட்டா வட்டார காங்கிரஸ் சார்பில் வல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வல்லம் வட்டார தலைவர்கள் சுப்பிரமணி, கோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்குரைஞர் ராஜாராம் சிற்ப்புரையாற்றினார். கூட்டத்தில் விவசாய பிரிவு ஜோலதாஸ், மகளிர் அணி சரஸ்வதி, மைலம் வட்டார தலைவர் கோவிந்தன், ஒலக்கூர் வட்டார தலைவர் காந்தி, மதிவாணன் உள்ளிட்ட காங்கிரஸார் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்