எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கப்பியாம்புலிய+ர் ஏ.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கினை கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.இக்கருத்தரங்கினை தொடங்கி வைத்து, மாணவ மாணவியர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கி கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:விழுப்புரம் மாவட்டத்தில் 48,000 மாணவ மாணவியர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்று கல்லூரிக்கு சென்று மேற்படிப்பை தொடர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மாணவ மாணவியர்கள் தேர்வில் வெற்றிபெறுவதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 47,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதே பள்ளியில் மேல்நிலைப் படிப்பினை தொடரலாம். அல்லது மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப, தொழில் கல்வி சம்பந்தமான துறைகளில் சேர்ந்து படிக்கலாம். தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவ மாணவியர்கள் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க வேண்டும்.பள்ளி படிப்பு என்பது, அறிவுத் திறனை மட்டும் வளர்த்துக் கொள்வதற்கான இடம் அல்ல. அறிவுத்திறனுடன் வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகள், சமூக உணர்வுகள், தெளிவான சிந்தனை ஆகிவற்றை பெற்று எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைப்பதற்கான வேலையினை பெறுவதும் ஆகும். பள்ளிக் கல்வித்துறை சார்பாக தமிழகம் முழுவதும் மேற்படிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் கப்பியாம்புலிய+ர், மயிலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இக்கருத்தரங்கின் நோக்கம், தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவ மாணவியர்கள் எத்துறையை தேர்ந்தெடுப்பது, எக்கல்லூரியை தேர்ந்தெடுப்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக இக்கருத்தரங்கம் அமையும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும். பொறியியல் படிப்பினை தேர்வு செய்யும் மாணவர்கள் தலைசிறந்த பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.கலை மற்றும் அறிவியல் படிப்பு பயில விரும்பும் மாணவ மாணவியர்கள் அத்துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். எத்துறையாக இருந்தாலும், அத்துறையில் தலைசிறந்து விளங்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும். மாணவ மாணவியர்கள் படிப்பிற்காக கல்வி கடன் வழங்க தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு, நன்கு படித்து வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைய வேண்டும். இதுபோன்ற கருத்தரங்கினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக்கொண்டு, சமுதாயத்தில் சிறந்த இடத்தை பெற வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில், முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், ஏ.ஆர். பொறியியல் கல்லூரி தாலாளர் மகாதேவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
08 Jul 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.