முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக மம்தா மீண்டும் தேர்வு

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா  - மேற்குவங்காள மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக 4-வது முறையாக முதல்வர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரே தலைவர்
இந்திய அளவில் பிராந்திய கட்சிகளில், மிகவும் முக்கியமான தலைவராக தற்போது மம்தா பானர்ஜி திகழ்ந்து வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்படும் ஒரே தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார். கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்காள மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை அதிரடியாக கொண்டு வந்தவர்.

மீண்டும் தேர்வு
இந்நிலையில், அனைந்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டரங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்புகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 10 ஆயிரத்தும் மேற்பட்ட திர்ணாமூல் கட்சியினர் மைதானத்தில் கூடினர்.

தொண்டராக இருக்க ...
தேர்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “தலைவர் பொறுப்பு வேறு யாரிடமாவது கொடுக்கப்பட்டிருந்தால், சிறப்பானதாக இருந்திருக்கும். எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன. கட்சியின் தொண்டராக இருக்கவே விரும்புகிறேன். ஏனெனில் தொண்டர்கள் தான் கட்சியின் சொத்து. தலைவர்கள் அல்ல” என்றார்.

4-வது முறையாக ...
1998-ம் ஆண்டு முதல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த நவம்பர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் தேர்தலில் தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதும் 6 ஆண்டுகளுக்கு அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்