எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் கால்நடை மருந்தகத்தில், அமைந்துள்ள உலர் தீவனக் கிடங்கினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
35 இலட்சம் கால்நடைகளும், 6 இலட்சம் செம்மறி ஆடு
உலர் தீவன கிடங்கினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு தெரிவித்ததாவது திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 35 இலட்சம் கால்நடைகளும், 6 இலட்சம் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளும் உள்ளது. இவ்வாண்டு கோடைகாலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இப்பற்றாக்குறையினை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு கால்நடைகளுக்கான உலர்தீவனம் வழங்கப்பட்டு வருகிறது.
10 இடங்களில் உலர் தீவன கிடங்குகள்
மேலும், மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் உலாதீவனக்கிடங்குகள் அமைக்க குழு அமைக்கப்பட்டு பெதப்பம்பட்டி, குறிச்சிக்கோட்டை, மடத்துக்குளம், தாராபுரம, மூலனூர், வெள்ளகோவில், காங்கயம், செங்கப்பள்ளி, சேயூர் மற்றும் பல்லடம் ஆகிய 10 இடங்களில் உலர்தீவனக்கிடங்குகள் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் பொங்கலூர், குண்டடம், பெருமாநல்லூர், ஆகிய இடங்களில் துணை கிடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான உலர்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. உலர்தீவனக்கிடங்குகளுக்கு தேவையான உலர்தீவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதனடிப்படையில் வைக்கோல் பெறப்பட்டு வருகிறது. இதுவரை ரூபாய். 83 இலட்சம் மதிப்புள்ள 756 மெட்ரிக் டன்கள் உலர்தீவனம் பெறப்பட்டு நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 10 உலர்தீவனக்கிடங்குகளின் மூலம் வழங்கப்பட்ட வைக்கோல் உலர்தீவனத்தை
7,600 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்
சுமார் 7,600 விவசாயிகள் பெற்று தங்களது கால்நடைகள் சுமார் 36, 400 எண்ணிக்கைக்கு பயன்படுத்தி அதன் மூலம் கால்நடைகளின் நலம் பேணப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்கள். பின்னர் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பதற்கான மக்காச்சோள விதைகளையும் கால்நடைகளுக்கான உலர்தீவனங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள்.
மேலும், அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடைகளின் தீவனத்திற்காக அசோலா பச்சை பாசி வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அசோலா வளர்த்து கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் கால்நடைகளின் புரதச்சத்து தேவையை ஈடு செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்கள்.
250 மரங்கன்றுகள்
இதனைத்தொடர்ந்து, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, செம்மடை பாளையம் குட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடப்பட்டிருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மற்றும் காட்டூர்புதூரில் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.4.50 இலட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தும் பணியினையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) மரு. முருகன், திருப்பூர் கோட்ட துணை இயக்குநர் மகேந்திரன், கால்நடை மருத்துவர்கள் நடராஜ், அன்பரசு, முத்துசெல்வி, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப.மகுடேஸ்வரி, மாணிக்கம், உதவி பொறியாளர்கள் கற்பகம், கார்த்திக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்கள்; இதுவரை 1,200 பேர் பலி
02 Dec 2025ஜகார்த்தா : ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்களால் நடப்பாண்டில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
‘டித்வா’ புயலால் காரணமாக இலங்கையில்14 லட்சம் பேர் பாதிப்பு
02 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
02 Dec 2025சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் அஜித் சாமி தரிசனம்
02 Dec 2025கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
-
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்த தகவல் வெளியீடு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது அரசு
02 Dec 2025சென்னை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
-
சென்னை மழை பாதிப்பு குறித்து களத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
02 Dec 2025சென்னை : கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்
02 Dec 2025இயக்குனர் கணேஷ் கே.பாபுவின் முதல் தயாரிப்பான புதிய படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குநர்கள் H.
-
சென்னை, தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ. 39 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Dec 2025சென்னை, சென்னை தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
நாட்டைவிட்டு தப்பிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ.58,000 கோடி இழப்பு: மத்திய அரசு
02 Dec 2025புதுடெல்லி, நாட்டைவிட்டு தப்பியோடிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ. 58,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
BP180 திரை விமர்சனம்
02 Dec 2025வட சென்னை பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன், தன் வேலையில் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார்.
-
'சஞ்சார் சாத்தி' செயலியை பதிவு செய்வது கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்
02 Dec 2025புதுடெல்லி, அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை பதிவு செய்வது கட்டாயமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
இன்று கார்த்திகை தீபத்திருவிழா: தி.மலை கிரிவலப்பாதையில் 1,060 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
-
யாரு போட்ட கோடு இசை வெளியீட்டு விழா
02 Dec 2025டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், லெனின் வடமலை இயக்கத்தில், பிரபாகரன் மற்றும் மேஹாலி மீனாட்சி நடித்திருக்கும் திரைப்படம் ‘யார
-
இன்று மகா தீபத்தை முன்னிட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது 300 கிலோ எடை கொண்ட கொப்பரை
02 Dec 2025திருவண்ணாமலை : சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று இன்று மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் மகா தீப
-
புதுவையில் விஜய் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
02 Dec 2025புதுச்சேரி : புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.
-
வேலூரில் நெஞ்சை உலுக்கிய துயரம்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலியான சோகம்
02 Dec 2025வேலூர் : வேலூரில் மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம்: கி.வீரமணிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
02 Dec 2025சென்னை, தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம் என்று கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வெள்ளகுதிர திரை விமர்சனம்
02 Dec 2025சாலை வசதியே இல்லாத உறவினர் வீட்டில் தங்கும் நாயகன் ஹரிஷ் ஓரி அங்கு கிடைக்கும் ஒருவித போதை பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
-
எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக தொடர் அமளி : அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
02 Dec 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்: அமைச்சர்
02 Dec 2025சென்னை : சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழை
-
சஞ்சார் சாதி கட்டாயமா? - மத்திய அமைச்சர் விளக்கம்
02 Dec 2025புதுடெல்லி : சஞ்சார் சாதி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமை என்று பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாடு முழுவதும் 9.86 லட்சம் பேர் பயன்
02 Dec 2025சென்னை : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 9.86 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
-
முறையான காரணம் இன்றி பொதுநல வழக்கை திரும்பபெற அனுமதி கோரினால் அபராதம் ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை
02 Dec 2025மதுரை, பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
-
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
02 Dec 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை நீடித்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு விருந்து அளிக்கப்பட்


