எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் கால்நடை மருந்தகத்தில், அமைந்துள்ள உலர் தீவனக் கிடங்கினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
35 இலட்சம் கால்நடைகளும், 6 இலட்சம் செம்மறி ஆடு
உலர் தீவன கிடங்கினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு தெரிவித்ததாவது திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 35 இலட்சம் கால்நடைகளும், 6 இலட்சம் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளும் உள்ளது. இவ்வாண்டு கோடைகாலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இப்பற்றாக்குறையினை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு கால்நடைகளுக்கான உலர்தீவனம் வழங்கப்பட்டு வருகிறது.
10 இடங்களில் உலர் தீவன கிடங்குகள்
மேலும், மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் உலாதீவனக்கிடங்குகள் அமைக்க குழு அமைக்கப்பட்டு பெதப்பம்பட்டி, குறிச்சிக்கோட்டை, மடத்துக்குளம், தாராபுரம, மூலனூர், வெள்ளகோவில், காங்கயம், செங்கப்பள்ளி, சேயூர் மற்றும் பல்லடம் ஆகிய 10 இடங்களில் உலர்தீவனக்கிடங்குகள் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் பொங்கலூர், குண்டடம், பெருமாநல்லூர், ஆகிய இடங்களில் துணை கிடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான உலர்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. உலர்தீவனக்கிடங்குகளுக்கு தேவையான உலர்தீவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதனடிப்படையில் வைக்கோல் பெறப்பட்டு வருகிறது. இதுவரை ரூபாய். 83 இலட்சம் மதிப்புள்ள 756 மெட்ரிக் டன்கள் உலர்தீவனம் பெறப்பட்டு நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 10 உலர்தீவனக்கிடங்குகளின் மூலம் வழங்கப்பட்ட வைக்கோல் உலர்தீவனத்தை
7,600 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்
சுமார் 7,600 விவசாயிகள் பெற்று தங்களது கால்நடைகள் சுமார் 36, 400 எண்ணிக்கைக்கு பயன்படுத்தி அதன் மூலம் கால்நடைகளின் நலம் பேணப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்கள். பின்னர் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பதற்கான மக்காச்சோள விதைகளையும் கால்நடைகளுக்கான உலர்தீவனங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள்.
மேலும், அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடைகளின் தீவனத்திற்காக அசோலா பச்சை பாசி வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அசோலா வளர்த்து கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் கால்நடைகளின் புரதச்சத்து தேவையை ஈடு செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்கள்.
250 மரங்கன்றுகள்
இதனைத்தொடர்ந்து, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, செம்மடை பாளையம் குட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடப்பட்டிருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மற்றும் காட்டூர்புதூரில் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.4.50 இலட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தும் பணியினையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) மரு. முருகன், திருப்பூர் கோட்ட துணை இயக்குநர் மகேந்திரன், கால்நடை மருத்துவர்கள் நடராஜ், அன்பரசு, முத்துசெல்வி, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப.மகுடேஸ்வரி, மாணிக்கம், உதவி பொறியாளர்கள் கற்பகம், கார்த்திக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
கணவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: ‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
09 Jul 2025சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.